நகைச்சுவை வேடத்தில் நடிக்க சிரமப்பட்ட மீனாட்சி சவுத்ரி | இரண்டு நாளில் ரூ.51 கோடி வசூலித்த ‛பராசக்தி' : நாளை நன்றி அறிவிப்பு விழா | ஜனநாயகனுக்கு தொடரும் சிக்கல் : தணிக்கை வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் | சிறுவயது பாலியல் துன்புறுத்தல்: 'மரியான்' படப்பிடிப்பில் அசவுகரியம்: பார்வதி 'ஓபன் டாக்' | சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா? | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது | அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம் | பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ் | வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை | கதை நாயகியாக நடிக்கும் வடிவுக்கரசி |

ஒரு காலத்தில் கமலுக்கு போட்டியாக கொண்டு வரப்பட்டவர்தான் மோகன். கமலின் கால்ஷீட் கிடைக்காத தயாரிப்பாளர்கள் மோகனிடம் சென்ற காலமும் இருந்தது.
கர்நாடகாவை சேர்ந்த மோகனுக்கு தமிழ் அவ்வளவாக பேச வராது. அவரது குரலும் அவரது தோற்றத்துக்கு ஏற்ற குரலாக இல்லாமல் இருந்தது. இதனால் அவருக்கு எஸ்.என்.சுரேந்தர் (விஜய்யின் தாய்மாமன்) குரல் கொடுத்தார். எஸ்.என்.சுரேந்தர், நடிகராகவும், பாடகராகவும் இருந்தார். அவர் மோகனுக்கு 70 படங்கள் வரை டப்பிங் பேசினார்.
மோகன் முதன் முதலில் நடித்ததே கமலுடன்தான். பாலுமகேந்திரா இயக்கிய 'கோகிலா' என்ற கன்னட படத்தில் கமலுடன் நடித்தார் . பின்னர் நடிக்கவில்லை. அதன் பிறகு 1984ம் ஆண்டு வெளிவந்த 'ஓ மானே மானே' என்ற படத்தில் மோகனுக்காக 'பொன்மானைத் தேடுதே என் வீணை பாடுதே' என்ற பாடலைப் பாடிக் கொடுத்தார் கமல்.
இந்த பாடலை கமல் பாடியது குறித்து ஒரு சுவையான தகவல் உண்டு. வேறு படத்தின் பாடல்கள் குறித்து இளையராஜாவுடன் பேச பிரசாத் ஸ்டூடியோ சென்றார் கமல். அப்போது இளையராஜா 'பொன்மானை தேடுதே' பாடலின் ஒத்திகையில் இருந்தார்.
பாடல் ரொம்ப பிரமாதமாக இருக்கிறதே யார் பாடுகிறார்கள் என்றார் கமல். யாரையும் முடிவு செய்யவில்லை உனக்கு பிடிச்சிருந்தா நீயே பாடிவிடு என்றார் இளையராஜா . கமலும் ஒப்புக் கொண்டார். ஆனால் இந்த பாட்டுக்கு நடிக்கப்போவது மோகன் என்றாராம் இளையாராஜா. 'யாரு நடிச்சா என்ன பாட்டு உங்களோடதுதானே' என்ற கமல் உடனே பாடிக் கொடுத்தாராம்.




