பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா |

இசையமைப்பாளர் இளையராஜா முதலில் இசையமைத்த 'அன்னக்கிளி' படம், மே 14, 1976ல் வெளியானது. அந்தவகையில் சினிமாவில் 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் இளையராஜா. இதுவரை ஆயிரத்து 400க்கும் அதிகமான படங்களில் பல ஆயிரம் பாடல்களுக்கு இசையமைத்து விட்டார்.
ஆயிரக்கணக்கான மேடை கச்சேரிகளை பார்த்துவிட்டார். 5 தேசியவிருது, ஏகப்பட்ட மாநில, மற்ற விருதுகள், பத்ம விபூஷண் விருது வரை வாங்கிவிட்டார். 81 வயதிலும் கச்சேரிகள், சிம்போனி என பிஸியாக இருக்கிறார். ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருக்கிறார். இதற்கெல்லாம் மணிமகுடமாக இந்த 50வது ஆண்டில் அவருக்கு பாரதரத்னா கிடைக்க வேண்டும், வாழும் காலத்திலேயே அவர் கவுரவிக்கப்பட வேண்டும் என்பதே அவருடைய ரசிகர்களின் ஆர்வமாக இருக்கிறது.
இளையராஜாவுக்கு பாரதரத்னா விருது கொடுக்க ஏற்பாடுகள் நடப்பதாக சில மாதங்களாக தகவல்கள் கசிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ராஜாஜி, சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன், சி.வி.ராமன், காமராஜர், அப்துல்கலாம், எம்ஜிஆர், எம்.எஸ் சுப்புலட்சுமி, சி.சுப்ரமணியம் ஆகியோர் இந்தியாவின் உயர்ந்த விருதான பாரதரத்னா விருது பெற்றவர்கள்.