விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் | தேசிங்குராஜா 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு | அம்மா, தங்கச்சி வேடங்களில் சுவாசிகா | ஒரு படத்துக்கு 5 இசையமைப்பாளர்கள் | மீண்டும் ஒரு ‛ஜென்ம நட்சத்திரம்' : 6 மணி 6 நிமிடம் 6 நொடியில் வெளியான தலைப்பு | தயாரிப்பாளர்களை கண்டித்து: பெப்சி ஒரு நாள் வேலை நிறுத்த அறிவிப்பு | 'மையல்' நாயகிக்கு அழகும், அம்சமும் இருக்கிறது : கே.எஸ்.ரவிகுமார், ஆர்.வி.உதயகுமார் பாராட்டு | தலைப்பு பிரச்னை : சந்தானம் படத்திற்கு தடை கேட்டு வழக்கு |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சந்தீப் கிஷன் நடிப்பில் தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் சந்தீப் கிஷனின் பிறந்த நாளில் ஒரு கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்டார்கள். அதையடுத்து இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கும் இந்த படம் 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருவதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்தாலும் , முதல் காப்பி அடிப்படையில் இந்த படத்தை தன்னுடைய ஜேசன் சஞ்சய் ஜோசப் மீடியா என்டர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் தயாரித்து கொடுக்கிறாராம் ஜேசன் சஞ்சய். அந்த வகையில் இந்த படத்தில் இயக்குனராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் அவர் உருவெடுத்து இருக்கிறார்.