டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் | மீண்டும் போதையில் கலாட்டா ; ஜெயிலர் வில்லன் கைதாகி ஜாமினில் விடுதலை | காந்தாரா படப்பிடிப்பில் விபத்து நடக்கவில்லை ; தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் | 'மாமன்' பட இசையமைப்பாளரிடம் மன்னிப்பு கேட்ட சூரி | அல்லு அர்ஜுனின் தோற்றத்தில் இருப்பவருக்கு ஜாக்பாட் ; விளம்பரத்தில் நடிக்க 12 லட்சம் சம்பளம் | 50 வருட அனுபவம் கொண்ட தேசிய விருது ஒளிப்பதிவாளர் டைரக்சனில் நடிக்கும் யோகிபாபு | கரையான் அரித்த ஒரு லட்சம்: ஏழைப் பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ் | சூர்யா- 45வது படத்தின் டைட்டில் வேட்டை கருப்பு? | போர் பதட்டம் எதிரொலி: 'தக்லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை தள்ளி வைத்த கமல்ஹாசன்! | துருவ் நடிக்கும் உண்மைக் கதை : மணத்தி கணேசன் யார் தெரியுமா? |
பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடியாக 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைத்து பயங்கரவாத முகாம்கள் மீதும், பாகிஸ்தான் மீதும் இந்திய ராணுவம் கடுமையான தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.
'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயர்தான் இந்திய மக்களின் மனதில் கடந்த சில நாட்களாக ஒலித்து வருகிறது. இந்தப் பெயரை வரும் நாட்களில் பயன்படுத்திக் கொள்ள ஹிந்தி சினிமா தயாரிப்பாளர்கள் அவர்களது சங்கத்தில் பதிவு செய்ய போட்டி போட்டு விண்ணப்பம் செய்வதாக நேற்றைய செய்தியில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.
அதற்கு ஒரு படி மேலே, சில கார்ப்பரேட் நிறுவனங்கள் 'ஆபரேஷன் சிந்தூர்' பெயருக்கு 'டிரேட் மார்க்' பதிவு செய்ய விண்ணப்பம் செய்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மே 7ம் தேதியன்று, முதலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனம், அடுத்து மேலும் மூன்று தனிநபர் விண்ணப்பம் செய்துள்ளனர். நேற்று இன்னும் இரண்டு பேர் விண்ணப்பித்துள்ளனர். முதலில் விண்ணப்பம் செய்பவர்களுக்கு முன்னுரிமை என்பது இந்த 'டிரேட் மார்க்' வழங்கப்படும்.
இந்திய மக்களின் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ உடனடியாக இப்படி வியாபாரத்திற்காக விண்ணப்பம் செய்வதா என்ற சர்ச்சை கடுமையாக எழுந்தது. அதையடுத்து ரிலயன்ஸ் நிறுவனம் அவர்களது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இவ்வளவு சர்ச்சை எழுந்த பிறகு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயர் எந்த ஒரு திரைப்பட சங்கங்களிலும், டிரேட் மார்க் பதிவிலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்றே தெரிகிறது.