பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
'ஒரு அடார் லவ்' படம் மூலம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். 'குட் பேட் அக்லி' படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் அவர் நடித்த கதாபாத்திரம் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார். தற்போது அவருக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் பிரியா அதன்மூலம் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்குவார். சமீபத்தில் அவர் நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் அவர் தனது கேரியர் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அஜித் மற்றும் அர்ஜூன் தாஸ் உடன் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தடுத்தும் இதே போன்று வலுவான திறமையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். நடிப்புக்குத் தீனி போடும் விதமாக 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்த நித்யா கதாபாத்திரம் அமைந்தது. அஜித்துடன் நடித்ததன் மூலம் எனது கனவு நிறைவேறிவிட்டது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
அடுத்தடுத்து நான் நடிக்க இருக்கும் படங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்தெடுக்கப் போகிறேன். இயக்குனர் மணிரத்னம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆக்ஷன் ரோலிலும் நடிக்க வேண்டும். சினிமாவில் அடுத்தடுத்து உயரங்கள் தொடுவதுதான் மகிழ்ச்சி.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதும் என்னுடைய கேரியரில் ஒரு பகுதிதான். எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் செய்வதில் முழு கவனம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.