'யாதும் அறியான்' ஆடியோ உரிமையை கைப்பற்றிய சரிகம | டிரண்டிங்: ரீல் வீடியோவால் சீரழியும் தம்பதிகளின் கதை | 'கூலி'க்காக ஆடிய டி.ராஜேந்தர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் மாதவன் படம் | தமிழில் 'எப் 1': நாளை வெளிவருகிறது | பிளாஷ்பேக்: மார்க்கெட் இழந்ததால் வெளிவராத விஜயன் படம் | பிளாஷ்பேக்: சரஸ்வதி சபதம் உருவாக காரணமான 'கலாவதி' | கூலி படத்திலிருந்து 'சிக்கிட்டு' பாடல் வெளியீடு | போதை பொருள் வழக்கு : கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை | ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் நடிகை வரலட்சுமி |
'ஒரு அடார் லவ்' படம் மூலம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். 'குட் பேட் அக்லி' படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் அவர் நடித்த கதாபாத்திரம் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார். தற்போது அவருக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் பிரியா அதன்மூலம் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்குவார். சமீபத்தில் அவர் நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் அவர் தனது கேரியர் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அஜித் மற்றும் அர்ஜூன் தாஸ் உடன் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தடுத்தும் இதே போன்று வலுவான திறமையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். நடிப்புக்குத் தீனி போடும் விதமாக 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்த நித்யா கதாபாத்திரம் அமைந்தது. அஜித்துடன் நடித்ததன் மூலம் எனது கனவு நிறைவேறிவிட்டது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
அடுத்தடுத்து நான் நடிக்க இருக்கும் படங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்தெடுக்கப் போகிறேன். இயக்குனர் மணிரத்னம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆக்ஷன் ரோலிலும் நடிக்க வேண்டும். சினிமாவில் அடுத்தடுத்து உயரங்கள் தொடுவதுதான் மகிழ்ச்சி.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதும் என்னுடைய கேரியரில் ஒரு பகுதிதான். எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் செய்வதில் முழு கவனம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.