‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் | ராதிகா தாயார் மறைவு: நேரில் சென்று ஆறுதல் சொன்ன பாரதிராஜா | பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' | சென்னையில் நடந்த 80ஸ் நடிகர், நடிகைகள் ரீ யூனியன் | அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் | இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது |
'ஒரு அடார் லவ்' படம் மூலம் பிரபலமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். 'குட் பேட் அக்லி' படத்தில் அர்ஜூன் தாஸ் உடன் அவர் நடித்த கதாபாத்திரம் மூலம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறார். தற்போது அவருக்கு பல வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் பிரியா அதன்மூலம் அடிக்கடி சர்ச்சையிலும் சிக்குவார். சமீபத்தில் அவர் நண்பர்களுடன் மது அருந்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்த நிலையில் அவர் தனது கேரியர் குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: அஜித் மற்றும் அர்ஜூன் தாஸ் உடன் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தடுத்தும் இதே போன்று வலுவான திறமையான கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். நடிப்புக்குத் தீனி போடும் விதமாக 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்த நித்யா கதாபாத்திரம் அமைந்தது. அஜித்துடன் நடித்ததன் மூலம் எனது கனவு நிறைவேறிவிட்டது. அவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
அடுத்தடுத்து நான் நடிக்க இருக்கும் படங்களை கவனமுடன் தேர்ந்தெடுத்தெடுக்கப் போகிறேன். இயக்குனர் மணிரத்னம் படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும். ஆக்ஷன் ரோலிலும் நடிக்க வேண்டும். சினிமாவில் அடுத்தடுத்து உயரங்கள் தொடுவதுதான் மகிழ்ச்சி.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதும் என்னுடைய கேரியரில் ஒரு பகுதிதான். எப்போதும் என் மீது கவனம் இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் செய்வதில் முழு கவனம் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்றார்.