அஜித்துக்கு என்னாச்சு : இப்படி மாறிட்டாரே? | போதைப் பொருள் வழக்கு : தமிழ்த் திரையுலகில் பரபரப்பு… | சுரேஷ் கோபி பட டைட்டிலை சென்சார் மாற்ற சொன்னதன் காரணம் இதுதான் | ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்ருதிஹாசனின் எக்ஸ் கணக்கு | கிச்சா சுதீப்பின் பேச்சுக்கு கர்நாடக துணை முதல்வர் பதில் | ‛பேட்ரியாட்' டைட்டிலை உறுதி செய்த மோகன்லால் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளருக்கு முன்ஜாமீன் தரக்கூடாது : நீதிமன்றத்தில் கேரள போலீஸார் மனு | குடும்ப பிரச்னையால் தவறு செய்துவிட்டேன் : போலீஸ் விசாரணையில் ஸ்ரீகாந்த் கண்ணீர் | திருக்குறள் படத்தை முதல்வர் பார்ப்பாரா? | நியூயார்க் திரைப்பட விழாவில் அங்கம்மாளுக்கு கவுரவம் |
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதில் நடவடிக்கையாக 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயர் வைத்து இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதலை நடத்தினர். இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளித்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள் பலரும் ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
ரஜினிகாந்த்
“போராளியின் சண்டை ஆரம்பமாகிவிட்டது. பணி முடியும் வரை நிறுத்த வேண்டாம். மொத்த நாடும் உங்களுடன் உள்ளது,” என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை 'டேக்' செய்து தனது ஆதரவைத் ரஜினி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
பெருமைமிக்க இந்தியா தனது ஆயுதப் படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது. கோழைத்தனமான பயங்கரவாத செயல்களால் பிளவுபடாத ஒரு வலிமையான தேசத்தின் உறுதியான பதில் இது. இந்திய அரசு எடுத்த தீர்க்கமான மற்றும் திறன்மிக்க ராணுவ நடவடிக்கையை நான் மெச்சுகிறேன். ஜெய்ஹிந்த்,” என முப்படையினரின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படத்தைப் பகிர்ந்து கமல் பாராட்டியுள்ளார்.
விஜய்
நடிகரும், தவெக தலைவருமான விஜய், “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்”, எனக் குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன்
“இந்திய ராணுவனத்தின் முகம் இதுதான்… ஜெய்ஹிந்த்,” என 'ஆபரேஷன்சிந்தூர்' ஹேஷ்டேக்கையும் இணைத்து சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.
ஏஆர் ரஹ்மான்
வார்த்தைகளில் எதுவும் குறிப்பிடாமல், புறா, ஹாட்டின், தேசியக்கொடி ஆகியவற்றை எமோஜி வடிவில் இசையமைப்பாளர் ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
தனுஷ்
பயங்கரவாதத்திற்கு எதிராக நமது நாடு ஒன்றுபட்டு நிற்கிறது. நமது ஆயுதப் படைகளை நினைத்து பெருமை கொள்வோம், ஜெய்ஹிந்த்,” என தனுஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இளையராஜா
மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி... ஆபரேஷன் சிந்தூர் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா.