3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' |

தென்னிந்தியத் திரையுலகத்தில் குறிப்பாக தமிழ், தெலுங்கு சினிமாவில் பாலிவுட்டிலிருந்து வரும் நடிகைகளின் ஆதிக்கம்தான் கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது. அங்கு ஓரிரு படங்களில் நடித்து பெரிய வரவேற்பைப் பெறாத நடிகைகள் அப்படியே தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆரம்பித்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளனர். அதற்கு பலரை உதாரணமாகச் சொல்லலாம்.
இப்போதும் பாலிவுட் நடிகைகளுக்கு சிலர் முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும் இங்குள்ள நடிகைகளும் மற்ற மொழிகளில் வெற்றி வாகை சூடி வருகின்றனர். குறிப்பாக மலையாள நடிகைகள் தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிகம் நடிக்கின்றனர். இப்போது அந்த இடத்திற்கு கன்னட நடிகைகளும் போட்டிக்கு வர ஆரம்பித்துள்ளார்கள்.
ராஷ்மிகா மந்தனாவின் வருகை, வெற்றிக்குப் பிறகு தற்போது அந்த டிரெண்ட் ஆரம்பித்துள்ளது. 'கேஜிஎப்' நடிகையான ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்த 'ஹிட் 3' கடந்த வாரம் வெளியாகி 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி பெற்றுள்ளது. அடுத்து மற்றொரு கன்னட நடிகையான ருக்மணி வசந்த் என்டிஆரின் 31வது படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் அப்படத்தை இயக்கி வருகிறார். ருக்மணி தமிழில் அறிமுகமாகும் 'ஏஸ்' இந்த மாதம் வெளியாகிறது. அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக 'மதராஸி' படத்தில் நடித்து வருகிறார்.
எந்த மொழியிலிருந்து வந்தாலும் படம் வெற்றி என்றால் சென்டிமென்ட்டாக அதை பாலோ செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் சினிமாக்காரர்கள்.