ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? | தோத்துகிட்டேபோனா எப்படி : எப்பதான் ஜெயிக்கிறது | தாத்தா பெயரை காப்பாற்றுவேன்: நாகேஷ் பேரன் உருக்கம் | எனது முத்தக் காட்சியை எப்படி நீக்கலாம் : பாலிவுட் நடிகை கண்டனம் | ரஞ்சித், ஆர்யா படப்பிடிப்பில் சண்டை கலைஞர் மரணம் |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரது படங்கள் வெளிவந்தால் அவர்களது ரசிகர்களுக்குள் சமூக வலைத்தளங்களில் மோதல் வரும். ஆனால், சூர்யா படம் வரும் போது சமூக வலைத்தளங்களில் வசூல் பற்றிய 'டிரோல்கள்' அதிகமாக இருக்கும். அது அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'கங்குவா' படத்தின் போது நிறைய இருந்தது.
சூர்யா நடித்து நேற்று வெளியான 'ரெட்ரோ' படம் குறித்த வசூல் மோதலை தெலுங்குப் படமான 'ஹிட் 3' தேவையின்றி ஆரம்பித்து வைத்துள்ளது. அதற்கு 'ரெட்ரோ' வினியோகஸ்தரும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
'ஹிட் 3' படக்குழு முதல் நாள் வசூலாக 43 கோடி என்று பதிவிட்டு, கூடவே, “நேற்றைய உலக அளவிலான வசூலில் இந்தியப் படங்களில் அதிக வசூலைக் குவித்த ஹிட் 3” என்று மற்ற மொழிப் படங்களையும் சேர்த்து வம்பிழுத்துள்ளனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 'ரெட்ரோ' வினியோகஸ்தர், “தமிழகத்தில் வழக்கமான டிக்கெட் கட்டணத்தில் 17.75 கோடி வசூல்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆந்திரா, தெலங்கானாவில் முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளிவந்தால் டிக்கெட் கட்டணங்ளை சுமார் 10 நாட்கள் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி உண்டு. இரண்டு மாநிலங்களிலும் அவர்களது படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
அப்படியான டிக்கெட் கட்டண வசூலை வைத்துக் கொண்டுதான் அதிக வசூல், அதிக வசூல் என அவர்கள் கூவிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அப்படியான டிக்கெட் கட்டண உயர்வு நடப்பதில்லை. இதை மற்ற ரசிகர்களுக்கும் புரியம்படி தக்க பதிலடி கொடுத்துள்ள 'ரெட்ரோ' குழு.