கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரது படங்கள் வெளிவந்தால் அவர்களது ரசிகர்களுக்குள் சமூக வலைத்தளங்களில் மோதல் வரும். ஆனால், சூர்யா படம் வரும் போது சமூக வலைத்தளங்களில் வசூல் பற்றிய 'டிரோல்கள்' அதிகமாக இருக்கும். அது அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'கங்குவா' படத்தின் போது நிறைய இருந்தது.
சூர்யா நடித்து நேற்று வெளியான 'ரெட்ரோ' படம் குறித்த வசூல் மோதலை தெலுங்குப் படமான 'ஹிட் 3' தேவையின்றி ஆரம்பித்து வைத்துள்ளது. அதற்கு 'ரெட்ரோ' வினியோகஸ்தரும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
'ஹிட் 3' படக்குழு முதல் நாள் வசூலாக 43 கோடி என்று பதிவிட்டு, கூடவே, “நேற்றைய உலக அளவிலான வசூலில் இந்தியப் படங்களில் அதிக வசூலைக் குவித்த ஹிட் 3” என்று மற்ற மொழிப் படங்களையும் சேர்த்து வம்பிழுத்துள்ளனர்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக 'ரெட்ரோ' வினியோகஸ்தர், “தமிழகத்தில் வழக்கமான டிக்கெட் கட்டணத்தில் 17.75 கோடி வசூல்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
ஆந்திரா, தெலங்கானாவில் முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளிவந்தால் டிக்கெட் கட்டணங்ளை சுமார் 10 நாட்கள் வரை உயர்த்திக் கொள்ள அனுமதி உண்டு. இரண்டு மாநிலங்களிலும் அவர்களது படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
அப்படியான டிக்கெட் கட்டண வசூலை வைத்துக் கொண்டுதான் அதிக வசூல், அதிக வசூல் என அவர்கள் கூவிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் அப்படியான டிக்கெட் கட்டண உயர்வு நடப்பதில்லை. இதை மற்ற ரசிகர்களுக்கும் புரியம்படி தக்க பதிலடி கொடுத்துள்ள 'ரெட்ரோ' குழு.