மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

'பாகுபலி 1, 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் பெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் ராஜமவுலி. தற்போது மகேஷ்பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். சர்வதேச அளவில் கொண்டு போய் சேர்க்கும் அளவிலான படமாக இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார்கள்.
இதனிடையே, தனது கனவுப்படமான 'மகாபாரதம்' பற்றிய அப்டேட் ஒன்றை சமீபத்தில் நடந்த 'ஹிட் 3' பட விழாவில் தெரிவித்திருந்தார். 'மகாபாரதம்' படத்தில் நானி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி என்று கூறியிருந்தார். அதையடுத்து 'மகாபாரதம்' பற்றிய சில செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
அப்படத்தை 10 பாகங்களாக எடுக்க ராஜமவுலி திட்டமிட்டிருந்தார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தை மூன்று பாகங்களாக மட்டுமே உருவாக்க உள்ளோம் என ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். படத்திற்கான திரைக்கதை வடிவத்தை அவர்தான் எழுதி வருகிறார்.
மகேஷ்பாபு நடிக்கும் படத்தை எடுத்து முடித்த பின் 'மகாபாரதம்' படத்தின் வேலைகளில் ராஜமவுலி இறங்குவார் என்றும் தெரிகிறது.




