லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
'பாகுபலி 1, 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களின் பெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய அளவில் டாப் இயக்குனர்களில் ஒருவராக மாறியவர் ராஜமவுலி. தற்போது மகேஷ்பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். சர்வதேச அளவில் கொண்டு போய் சேர்க்கும் அளவிலான படமாக இப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கி வருகிறார்கள்.
இதனிடையே, தனது கனவுப்படமான 'மகாபாரதம்' பற்றிய அப்டேட் ஒன்றை சமீபத்தில் நடந்த 'ஹிட் 3' பட விழாவில் தெரிவித்திருந்தார். 'மகாபாரதம்' படத்தில் நானி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பது உறுதி என்று கூறியிருந்தார். அதையடுத்து 'மகாபாரதம்' பற்றிய சில செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.
அப்படத்தை 10 பாகங்களாக எடுக்க ராஜமவுலி திட்டமிட்டிருந்தார் என்று முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தை மூன்று பாகங்களாக மட்டுமே உருவாக்க உள்ளோம் என ராஜமவுலியின் அப்பா விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். படத்திற்கான திரைக்கதை வடிவத்தை அவர்தான் எழுதி வருகிறார்.
மகேஷ்பாபு நடிக்கும் படத்தை எடுத்து முடித்த பின் 'மகாபாரதம்' படத்தின் வேலைகளில் ராஜமவுலி இறங்குவார் என்றும் தெரிகிறது.