ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தபு நடிப்பதாக அறிவித்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து தற்போது கன்னட நடிகர் துனியா விஜய் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
கன்னட சினிமாவில் சிறிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்து 'துனியா' என்ற படத்தின் மூலம் பெரிய திருப்பத்தைப் பெற்றவர் நடிகர் விஜயகுமார். அதன்பின் 'துனியா' விஜய் என்றே கன்னட சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.
சில சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கியவர். குறிப்பாக 2016ம் வருடம் 'மஸ்தி குடி' என்ற படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பு திப்பகொன்டனஹள்ளி அணையில் நடைபெற்றது. ஹெலிகாப்டரிலிருந்து அணைக்குள் குதித்த விஜய் மற்றும் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் நீரில் மூழ்கினர். குழுவினரால் விஜய் காப்பாற்றப்பட்டார். ஆனால், ஸ்டன்ட் நடிகர்களான அனில், உதய் இறந்து போயினர். அதன்பின் கன்னடத் திரையுலகில் விஜய்க்கும், அப்படத்தின் இயக்குனர், ஸ்டன்ட் மாஸ்டர் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது.
2017ல் படக்குழுவைச் சேர்ந்த பலர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால், விஜய் மீது குற்றம் சாட்டப்படவில்லை. 2018ல் தனது நண்பரும், ஜிம் பயிற்சியாளரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
விமர்சகர்களால் பாராட்டப்பட்ட, சில விருதுகளைப் பெற்ற படங்களில் நடித்தவர் துனியா விஜய் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் துனியா விஜய்.