ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தபு நடிப்பதாக அறிவித்திருந்தார்கள். அதைத் தொடர்ந்து தற்போது கன்னட நடிகர் துனியா விஜய் நடிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
கன்னட சினிமாவில் சிறிய வேடங்களில் நடிக்க ஆரம்பித்து 'துனியா' என்ற படத்தின் மூலம் பெரிய திருப்பத்தைப் பெற்றவர் நடிகர் விஜயகுமார். அதன்பின் 'துனியா' விஜய் என்றே கன்னட சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுபவர்.
சில சர்ச்சைகளிலும் அவ்வப்போது சிக்கியவர். குறிப்பாக 2016ம் வருடம் 'மஸ்தி குடி' என்ற படத்தின் சண்டைக் காட்சி படப்பிடிப்பு திப்பகொன்டனஹள்ளி அணையில் நடைபெற்றது. ஹெலிகாப்டரிலிருந்து அணைக்குள் குதித்த விஜய் மற்றும் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் நீரில் மூழ்கினர். குழுவினரால் விஜய் காப்பாற்றப்பட்டார். ஆனால், ஸ்டன்ட் நடிகர்களான அனில், உதய் இறந்து போயினர். அதன்பின் கன்னடத் திரையுலகில் விஜய்க்கும், அப்படத்தின் இயக்குனர், ஸ்டன்ட் மாஸ்டர் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது.
2017ல் படக்குழுவைச் சேர்ந்த பலர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால், விஜய் மீது குற்றம் சாட்டப்படவில்லை. 2018ல் தனது நண்பரும், ஜிம் பயிற்சியாளரைத் தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
விமர்சகர்களால் பாராட்டப்பட்ட, சில விருதுகளைப் பெற்ற படங்களில் நடித்தவர் துனியா விஜய் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் துனியா விஜய்.