லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
இந்தியத் திரையுலகத்தில் பெரும் வசூல் சாதனை படைத்த 'பாகுபலி 2' படம் வெளிவந்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1700 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தெலுங்குத் திரையுலகத்தை சர்வதேச அளவில் எடுத்துச் சென்ற படமாக அது அமைந்தது.
அந்த சரித்திரப் படத்திற்குப் பிறகு இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான 'மகாபாரதம்'-ஐ தனது கனவுப் படம் என பேட்டிகளில் சொல்லி வந்தார். அந்தப் படத்திற்குரிய ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளை அவரது அப்பா விஜயேந்திர பிரசாத் ஏற்கெனவே செய்து வருகிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்று நடந்த 'ஹிட் 3' படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ராஜமவுலி. அப்போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் 'மகாபாரதம்' படத்தில் நானி நடிப்பது உறுதியானதா?” என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ராஜமவுலி, “நானி அதில் நடிக்கிறார் என்பது மட்டும் பிக்ஸ் ஆகிவிட்டது” என்றார்.
ராஜமவுலி இயக்கிய 'நான் ஈ' படத்தில் சமந்தாவின் காதலராக கொஞ்ச நேரமே நடித்து மனதில் இடம் பிடித்தார் நானி. அதன்பின் ராஜமவுலியின் இயக்கத்தில் அவர் நடிக்கவில்லை. இப்போது 'மகாபாரதம்' படத்தில் நானி நடிப்பது குறித்து முதல் அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.