'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
இந்தியத் திரையுலகத்தில் பெரும் வசூல் சாதனை படைத்த 'பாகுபலி 2' படம் வெளிவந்து இன்றுடன் எட்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1700 கோடிக்கும் அதிகமாக வசூலித்து தெலுங்குத் திரையுலகத்தை சர்வதேச அளவில் எடுத்துச் சென்ற படமாக அது அமைந்தது.
அந்த சரித்திரப் படத்திற்குப் பிறகு இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களில் ஒன்றான 'மகாபாரதம்'-ஐ தனது கனவுப் படம் என பேட்டிகளில் சொல்லி வந்தார். அந்தப் படத்திற்குரிய ஸ்கிரிப்ட் எழுதும் வேலைகளை அவரது அப்பா விஜயேந்திர பிரசாத் ஏற்கெனவே செய்து வருகிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தில் நேற்று நடந்த 'ஹிட் 3' படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் ராஜமவுலி. அப்போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் 'மகாபாரதம்' படத்தில் நானி நடிப்பது உறுதியானதா?” என்று கேட்டார்.
அதற்குப் பதிலளித்த ராஜமவுலி, “நானி அதில் நடிக்கிறார் என்பது மட்டும் பிக்ஸ் ஆகிவிட்டது” என்றார்.
ராஜமவுலி இயக்கிய 'நான் ஈ' படத்தில் சமந்தாவின் காதலராக கொஞ்ச நேரமே நடித்து மனதில் இடம் பிடித்தார் நானி. அதன்பின் ராஜமவுலியின் இயக்கத்தில் அவர் நடிக்கவில்லை. இப்போது 'மகாபாரதம்' படத்தில் நானி நடிப்பது குறித்து முதல் அப்டேட்டைக் கொடுத்துள்ளார்.