பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஸ்ரீலீலா. தற்போது சிவகார்த்திகேயன், அதர்வா, ஜெயம் ரவி நடிக்கும் 'பராசக்தி' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
எம்பிபிஎஸ் படித்து முடித்த ஸ்ரீலீலா, நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். சிறு வயதிலிருந்தே பரதநாட்டியம் பயின்றவர். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் நடிகையானவர். தன்னுடைய 21வது வயதிலேயே, 2022ம் ஆண்டு இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இப்போது மூன்றாவதாக ஒரு குழந்தையைத் தத்தெடுத்துள்ளார். அதுப்பற்றி, “வீட்டிற்குள் மற்றுமொருவர்… இதயங்களின் மீதான படையெடுப்பு... மேலும் மூச்சுத் திணற வைக்கும் மூச்சுத் திணறலுக்கு…,” என அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து இப்படி பதிவிட்டுள்ளார்.
அவரது இந்த செயலுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். சில நடிகைகள் மட்டுமே சினிமாவைத் தவிர்த்து சமூக சேவைகளிலும் ஆர்வமாக இருந்து சில நல்லவற்றைச் செய்து வருகிறார்கள்.