2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! | இரண்டாவது முறையாக பாலிவுட் இளம் நடிகருடன் இணையும் ராஷ்மிகா! |

தாம்பரம் : வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் 'பிரக்ருதி' என்ற யானையை, நடிகர் சிவகார்த்திகேயன், ஆறு மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார்.
வண்டலுார் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் விலங்குகளை தத்தெடுக்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில், தனி நபர்கள், நிறுவனங்கள், பொது நிறுவன அமைப்புகள் என, யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இந்த நிலையில், நடிகர் சிவகார்த்தி கேயன், 'பிரக்ருதி' என்ற பெண் யானையை, ஆறு மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார்.
இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நன்கொடைகள் வருமானவரி சட்டப் பிரிவு 80G-ன் கீழ் (பொருந்துமாறு) வரிவிலக்கு பெற தகுதியுடையவை. விலங்குகளை தத்தெடுக்க கூடுதல் விபரங்களுக்கு http://aazp.in/adoption/ என்ற இணையதளம் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
கடந்தாண்டும் இதே வண்டலூர் பூங்காவில் ஒரு சிங்கம், ஒரு புலியை சிவகார்த்திகேயன் தத்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




