Advertisement

சிறப்புச்செய்திகள்

'அஅஅ' படத்தின் முதல் ஹீரோயினாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம்? | திருடனாக நடித்தது சுவாரஸ்யமாக இருந்தது : சைப் அலிகான் | சூர்யாவின் 'ரெட்ரோ' விழாவில் விஜய் தேவரகொண்டா | சீமானின் தர்மயுத்தம் : மே மாதம் ரிலீஸ் | சிம்புவுக்கு நோ சொல்லமாட்டேன் : சந்தானம் | லோகேஷின் எல்சியு.,வில் ஒரு பகுதியாக இருந்தால் மகிழ்ச்சியடைவேன் - நடிகர் நானி | விஜய் சேதுபதி, பூரி ஜெகநாத் படத்தின் தலைப்பு இதுவா? | காப்புரிமை வழக்கு : ஏஆர் ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த ஐகோர்ட் உத்தரவு | ஜெயிலர்-2 படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் வழியில் ஸ்ரீ மாதேஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்த ரஜினிகாந்த்! | ரெட்ரோ' படத்தைப் பார்த்துவிட்டு சூர்யா கொடுத்த கமெண்ட்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக் : தியாகராஜ பாகவதரை காப்பாற்ற முயன்ற திரையுலகம்

25 ஏப், 2025 - 01:18 IST
எழுத்தின் அளவு:
Flashback-The-film-industry-tried-to-save-Thyagaraja-Bhagavathar

1944ம் ஆண்டு நடித்த 'ஹரிதாஸ்' படம்தான் பாகவதர் சிறைக்கு செல்லும் முன் நடித்த கடைசி படம். அதன்பிறகு பத்திரிகையாளர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு, 30 மாத சிறை தண்டனை என கழிந்தது பாகவதர் வாழ்க்கை.

சிறையில் இருந்து வெளிவந்த பிறகு மீண்டும் ஒரு வெற்றிப் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்க விரும்பினார் பாகவதர். சிறையில் இருந்து வந்ததும் நண்பர்களை சந்திக்கவில்லை. கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் புனேவில் உள்ள பிரபாத் ஸ்டூடியோவுக்கு சென்ற பாகவதர் அங்கு தங்கி இருந்து 'ராஜமுக்தி' படத்தின் பணிகளை தொடங்கினார். பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருந்த அவருக்கு பலரும் உதவ முன்வந்தார்கள். பாகவதரின் நண்பர் ராஜா சந்திரசேகர் படத்தை இயக்க முன்வந்தார். பானுமதி மற்றும் வி.என். ஜானகி, எம்.ஜி.ஆர் ஆகியோர் நடிக்க முன்வந்தனர்.

பாபநாசம் சிவன் பாடல்களை எழுதினார், சி.ஆர். சுப்பராமன் இசை அமைத்தார். எழுத்தாளர் புதுமை பித்தன் திரைக்கதை எழுதினார். எம்.எல்.வசந்தகுமாரி பாடல்கள் பாடினார். இவர்கள் குறைந்த சம்பளத்தில் அல்லது சம்பளம் வாங்காமல் பணியாற்றினார்கள்.

4 வருடங்களுக்கு பிறகு வருவதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடும் பொருளாதார சிக்கலால் படம் தாமதமானது, பாகவதருக்கு அவரது குரல் வளம் போய்விட்டது, தலை மொட்டையாகி விட்டது, அவரால் நடக்க முடியவில்லை என்பது மாதிரியான வதந்திகள் பரவியது. ஒரு வழியாக படம் வெளிவந்தாலும் அது பெரிய வரவேற்பை பெறவில்லை. பெரும் தோல்வி அடைந்தது.

அதன்பிறகு மனம் வெறுத்த பாகதவர் சினிமாவை மொத்தமாக கை கழுவினர். ஒரு கட்டத்தில் அவர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளானதோடு நோய்வாய்பட்டார். பின்னர் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி அவர் காலமானார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முழுக்க முழுக்க 'ஏஐ' மூலம் உருவான இந்தியாவின் முதல் படம்: பட்ஜெட் 10 லட்சம் தானாம்!முழுக்க முழுக்க 'ஏஐ' மூலம் உருவான ... திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய 'கீனோ' திரைப்படக் கல்லூரி மாணவர்கள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in