குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' | அறிமுகப் படத்திலேயே 1000 கோடி, அதிர்ஷ்ட ஹீரோயினாக மாறிய சாரா | 'ஏஐ' மூலம் யார் வேண்டுமானாலும் வயலின் இசைக்கலாம்: ஏ ஆர் ரஹ்மான் | போட்டி ரிலீஸ் : பிரபாஸின் பெருந்தன்மை, ரசிகர்கள் பாராட்டு | விமான நிலையத்தில் தடுமாறி விழுந்த விஜய் | பிளாஷ் பேக் : இயக்கத்தில் தோற்ற யூகி சேது | பிளாஷ்பேக் : தோல்வி படத்தை வெற்றிப்படமாக்கிய மாடர்ன் தியேட்டர்ஸ் | படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! |

கே.பாக்யராஜ் இயக்கிய 'தூறல் நின்னு போச்சு' படத்தில் அப்பாவி பெண்ணாக நடித்த சுலக்ஷனாவை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. பலரும் அதுதான் அவரது அறிமுக படம் என்று நினைப்பார்கள். ஆனால் அவர் அதற்கு முன்பு 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.
சுலக்ஷனா ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியை சேர்ந்தவர். அவரது தாத்தா சென்னையில் சினிமா பத்திரிகையாளராக இருந்தார். தாத்தா வீட்டில் வளர்ந்த சுலக்ஷனா, தாத்தாவுடன் அடிக்கடி படப்பிடிப்பு செல்வார். அப்படி ஒரு நாள் கே.பாலச்சந்தரின் 'காவியத் தலைவி' படப்பிடிப்புக்கு தாத்தாவுடன் சென்றார். ஜெமினி கணேசன், சவுகார் ஜானகிக்கு மகளாக நடித்துக் கொண்டிருந்த சிறுமிக்கு சரியாக நடிக்க வரவில்லை. இதனால் படப்பிடிப்புக்கு வந்திருந்த சுலக்ஷனாவை கூப்பிட்டு நடிக்க வைத்தார். அப்போது அவருக்கு வயது 3. அதன் பிறகு 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். தெலுங்கில் மட்டும் 80 படங்கள்.
'சுபோதயம்' என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்தார். சுலக்ஷனாவின் இயற்பெயர் ஸ்ரீதேவி. அப்போது ஸ்ரீதேவி முன்னணியில் இருந்தால் இந்த படத்தை இயக்கிய இயக்குனர் கே.விஸ்வநாத், சுலக்ஷனா என்று பெயரை மாற்றினார். அதன்பிறகு கன்னடத்தில் ராஜ்குமார் ஜோடியாக நடித்து அங்கேயும் பிரபலமானர். அதன்பிறகுதான் கே.பாக்யராஜின் தூறல் நின்னு போச்சு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார்.