பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் |

சிங்கப்பூர் பள்ளியில் படித்து வரும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கினார்.
நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வராகவும் இருப்பவர் பவன் கல்யாண். இவரின் இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகிறார். இந்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மார்க் சங்கர் காயம் அடைந்தார். அவருக்கு கைகள், கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் போது எழுந்த புகையை சுவாசித்ததால் அவருக்கு சுவாசக்கோளாறும் ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து, அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளதை ஜன சேனா கட்சி தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
மகனுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ள விவரம் அல்லூர் சீதாராம ராஜூ மாவட்டத்தில் உள்ள பவன் கல்யாணுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொண்டுள்ள அரசு பயணத்தை நிறுத்திவிட்டு, உடனடியாக அவர் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று அரசு உயரதிகாரிகளும், கட்சியின் முன்னணி தலைவர்களும் பவன் கல்யாணை கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து, அவர் உடனடியாக சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.