வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

சிங்கப்பூர் பள்ளியில் படித்து வரும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கினார்.
நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வராகவும் இருப்பவர் பவன் கல்யாண். இவரின் இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகிறார். இந்த பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மார்க் சங்கர் காயம் அடைந்தார். அவருக்கு கைகள், கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் போது எழுந்த புகையை சுவாசித்ததால் அவருக்கு சுவாசக்கோளாறும் ஏற்பட்டு இருக்கிறது.
இதையடுத்து, அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளதை ஜன சேனா கட்சி தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.
மகனுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ள விவரம் அல்லூர் சீதாராம ராஜூ மாவட்டத்தில் உள்ள பவன் கல்யாணுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொண்டுள்ள அரசு பயணத்தை நிறுத்திவிட்டு, உடனடியாக அவர் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று அரசு உயரதிகாரிகளும், கட்சியின் முன்னணி தலைவர்களும் பவன் கல்யாணை கேட்டுக் கொண்டுள்ளனர். இதையடுத்து, அவர் உடனடியாக சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




