சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் இன்று தனது 44வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
அல்லு அர்ஜுன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'புஷ்பா 2' படம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. அடுத்து தமிழ் இயக்குனரான அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார். அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. இதனிடையே, அல்லு அர்ஜுன் தனது பிறந்தநாளை மனைவி, மகன், மகள் ஆகியோருடன் வீட்டில் கேக் வெட்டி அமைதியாகக் கொண்டாடி உள்ளார். 'புஷ்பா 2'க்குப் பிறகான சர்ச்சைகளால் அவர் பொதுவெளியில் வருவதை கடந்த சில மாதங்களாகக் குறைத்துக் கொண்டார்.