ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |

சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். இதன்காரணமாகவே இதுபோன்ற சூதாட்ட செயலிகளை பிரபலப்படுத்தக்கூடிய விளம்பரங்களில் நடிகர் நடிகைகள் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. நடிகர் சரத்குமார்கூட இதுகுறித்த ஒரு சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் தற்போது சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா, நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரி நடிகர் பிரகாஷ்ராஜ் தனது இணைய பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கடந்த 2016ம் ஆண்டு ஒரு சூதாட்டம் செயலி விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் அதில் நடித்த பிறகுதான் என்னுடைய தவறை உணர்ந்தேன் . என்றாலும் 9 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த தவறுக்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் இது போன்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம் என்று அந்த வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.




