பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள். இதன்காரணமாகவே இதுபோன்ற சூதாட்ட செயலிகளை பிரபலப்படுத்தக்கூடிய விளம்பரங்களில் நடிகர் நடிகைகள் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. நடிகர் சரத்குமார்கூட இதுகுறித்த ஒரு சர்ச்சையில் சிக்கினார்.
இந்நிலையில் தற்போது சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா, நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது தெலுங்கானா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதையடுத்து தனது செயலுக்கு மன்னிப்பு கோரி நடிகர் பிரகாஷ்ராஜ் தனது இணைய பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், கடந்த 2016ம் ஆண்டு ஒரு சூதாட்டம் செயலி விளம்பரத்தில் நடித்தேன். ஆனால் அதில் நடித்த பிறகுதான் என்னுடைய தவறை உணர்ந்தேன் . என்றாலும் 9 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த தவறுக்காக இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்கள் இது போன்ற சூதாட்ட செயலியை பயன்படுத்தி பணத்தை இழக்க வேண்டாம் என்று அந்த வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.