'பேமிலி' படங்களுக்கு மாறுகிறதா தமிழ் சினிமா? | 'முருகர்' பற்றிய படத்தில் நடிக்கப் போகிறாரா ஜுனியர் என்டிஆர்? | 3 பிஎச்கே : ஒரே மேடையில் வாழ்த்திய 'டிரென்டிங்' இளம் இயக்குனர்கள் | இரு மொழிப் படங்கள்: உஷார் ஆவார்களா தமிழ் நடிகர்கள் ? | டிஜிட்டல் தரத்தில் 'உம்ராவ் ஜான்' - நாளை ரீரிலீஸ் | கார்த்தி படத்தில் நானி? | சிரஞ்சீவி 157வது படத்தில் வெங்கடேஷ்? | தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் எச்.வினோத்! | மாநாடு 2ம் பாகம் உருவாகிறதா? | போலீஸ் அதிகாரியாக மணிகண்டன்! |
சூர்யா நடிப்பில் அடுத்து ரெட்ரோ படம் வெளியாக உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி உள்ளார். இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். திரிஷா நாயகியாக நடிக்க, சுவாசிகா, சிவதா, யோகி பாபு, நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிகிறது. சில நாட்களாக இந்த படத்திற்காக ஈ.சி.ஆரில் பிரமாண்டமான கிராமம் போன்ற அரங்கம் அமைத்து 500 நடன கலைஞர்களுடன் சூர்யா, த்ரிஷா இணைந்து நடனமாடியதை படமாக்கியுள்ளனர். இந்த பாடல் காட்சியை ஷோபி மாஸ்டர் இயக்கியுள்ளார்.