'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
எம்ஜிஆரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் ராஜகுமாரி. இந்த படத்தை ஜூபிடர் பிலிம்ஸ் சோமு தயாரித்தார். சரியான வேலை இன்றி இருக்கும் தனது ஸ்டூடியோ ஊழியர்களுக்கு வேலை தர வேண்டும் என்பதற்காக எஸ்.ஏ.சாமியை சின்ன பட்ஜெட்டில் நமது ஊழியர்களை கொண்டே தயாரிக்க கூடிய வகையில் ஒரு கதையை எழுத சொன்னார். அதுதான் ராஜகுமாரி.
கதையை படித்த சோமு, கதை பிரமாதமாக இருக்கிறது. இந்த கதையை நம்மால் மட்டும் எடுக்க முடியாது, பெரிய பட்ஜெட்டில் பெரிய நடிகர்களை வைத்து எடுக்கலாம் என்று முடிவு செய்து நாயகனாக பி.யு.சின்னப்பாவையும், நாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியையும் நடிக்க வைக்கலாம் என்றார். அவரே படத்திற்கு 'ராஜகுமாரி' என்று பெயரும் வைத்தார்.
ஆனால் இயக்குனர் சாமி 'ரிஸ்க் எடுக்க வேண்டாம் நாமே படத்தை எடுத்து விடலாம்' என்று உறுதி அளித்து பட வேலைகளை ஆரம்பித்தார். வாட்டசாட்டமான அதே நேரத்தில் அழகான ஹீரோவை தேடினார். அப்போது அவர் 'ஸ்ரீமுருகன்' என்ற படத்தை பார்த்தார். அதில் எம்ஜிஆர் சிவதாண்டவம் ஆடியிருந்தார், அவரே ஹீரோ என்று முடிவு செய்தார் சாமி. நாயகியாக தெலுங்கு சினிமாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மாலதி நடித்தார்.
ஜூபிடர் பிலிம்சுக்கு பால் சப்ளை செய்து கொண்டிருந்த எம்.எம்.ஏ சின்னப்பா தேவர் முக்கிய கேரக்டருக்கு தேர்வானார். இவர்களுடன் எம்.என். நம்பியார், எம்.ஆர். சுவாமிநாதன், டி.எஸ். பாலையா, 'புலிமூட்டை' ராமசாமி, கே.மாலதி, தவமணி தேவி உள்ளிட்ட பலரும் நடித்தனர்.
படத்தை 11 ஆயிரம் அடியில் எடுத்து முடிக்க திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் முடியவில்லை. பட்ஜெட் எகிறியது. எடுத்தவரை படத்தை போட்டுபார்த்த தயாரிப்பாளர் சோமுவிற்கு படம் திருப்தி தரவில்லை. குறிப்பாக எம்ஜிஆர் பெண்களுக்குரிய அழகுடன் இருப்பதாக கருதினார்.
இன்னும் 7 ஆயிரம் அடி எடுத்தால்தான் படம் நிறைவடையும் என்கிற நிலை. இதனால் தயாரிப்பாளர் சோமு எல்லோரையும் அழைத்து "இன்னும் 4 ஆயிரம் அடிக்குள் படத்தை முடித்து விடுங்கள். அதன்பிறகும் படம் எனக்கு திருப்தி தராவிட்டால் படத்தை வெளியிடாமல் தீயிட்டு கொழுத்தி விடுவேன்" என்றார்.
அதன்பின்னர் ஒரு வழியாக படம் எடுத்து முடிக்கப்பட்டதும் படத்தை பார்த்த தயாரிப்பாளர் சோமு அசந்து விட்டார். இந்த மேஜிக் எப்படி நிகழ்ந்தது என்று எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருந்தார். படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதும், எம்ஜிஆர் ஹீரோ ஆனதும் வரலாறு.