எஸ்.என்.எஸ். பிக்சர்ஸ் சார்பில் ஹேமலதா சுந்தர்ராஜ் தயாரித்துள்ள படம் 'எனை சுடும் பனி'. இதில் நட்ராஜ் கதாநாயகனாகவும், உபாசனா ஆர்.சி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். உபாசனா கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர் '88' என்ற படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு பிரம்மா.காம், டிராபிக் ராமசாமி, கருத்துகளை பதிவு செய், யாரோ, லோக்கல் சரக்கு, ஒரு தவறு செய்தால் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இந்த படத்தில் அவர் நட்ராஜ் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் கே.பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம்புலி, கூல் சுரேஷ், தானீஷ், சுந்தர்ராஜ் , பில்லி முரளி, பழனி சிவபெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற 21ம் தேதி திரைக்கு வருகிறது.