'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார் ஹேமா. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலும் நடித்து வருகிறார். முன்னதாக சில சினிமாக்களிலும் நடித்த ஹேமா திரையுலகில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து அண்மையில் பகிர்ந்துள்ளார். அதில், 'நான் சின்னத்தம்பி சீரியலில் நடித்து கொண்டிருந்தபோது ஒரு படத்தில் கமிட் ஆகியிருந்தேன். அப்போது சில நாட்களிலேயே எனது சம்பளத்தில் மாற்றத்தை செய்திருந்தார்கள். அந்த சம்பளத்தில் என்னால் நடிக்க முடியாது என கூறினேன். ஆனால், அவர்கள் உன் மூஞ்சிக்கு வாய்ப்பு கொடுத்ததே பெரிது. இதில் சம்பளம் போதாதா? என மோசமாக நடத்தினார்கள். எனக்கு கோபம் வந்துவிட்டது. என் மூஞ்சுக்கு அந்த வாய்ப்பு பெரிது என்றால் வேறு எந்த மூஞ்சுக்கும் அந்த வாய்ப்பு செட்டாகது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதன்பிறகு அந்த படமும் டிராப் செய்யப்பட்டது. இப்படி சினிமாவில் சிலமுறை அவமானங்களும் எனக்கு ஏற்பட்டதுண்டு' என அந்த பேட்டியில் ஹேமா கூறியிருக்கிறார்.