பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ் சினிமாவில் வளர்ந்து ஆளானபோதும் தாய்மொழியான தெலுங்குதான் இனி தனக்கு முழுநேர சினிமா என்ற முடிவுக்கு வந்து விட்டார் அஞ்சலி. இதற்கு முக்கிய காரணம், தமிழில் திறமையான நடிகை என்று பெயரெடுத்துவிட்ட அஞ்சலிக்கு கோலிவுட் படாதிபதிகள் உரிய சன்மானம் கொடுக்காததுதானாம். அதோடு அவரை விட ஜூனியர் நடிகைகளுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்கும் படாதிபதிகள் அவர்களில் பாதியை அஞ்சலிக்கு தருவதற்குகூட தயங்கினார்களாம்.
அதனால்தான், தனக்கு மரியாதை இல்லாத கோலிவுட்டை சீக்கிரம் காலி பண்ணி விட வேண்டும் என்று ஒரு வருடமாக யோசித்து வந்த அஞ்சலி, சமீபத்தில் சித்தியுடன ஏற்பட்ட மோதலை அதற்கு சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டதாக கூறியுள்ளார். மேலும், தற்போது முழுநேர ஆந்திர நடிகையாகியிருக்கும் அவர், தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒரு கிளுகிளுப்பு பாடல் மற்றும் ஒரு முத்தக்காட்சி என்பதை ஒரு பாணியாகவே கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறாராம்.
அஞ்சலியின் இந்த அணுகுமுறை அங்குள்ள இயக்குனர்களுக்கு ரொம்ப பிடித்து விட்டதோடு, கவர்ச்சிக்கு தயங்கும், அமலாபால், சமந்தா போன்ற நடிகைகளுக்கு அஞ்சலி எவ்வளவோ பெஸ்ட் என்று அவரை போட்டி போட்டு புக் பண்ணுகிறார்களாம். இதனால், தெலுங்கில் அஞ்சலியின் மார்க்கெட் ஏறுமுகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறதாம்.