Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆந்திராவில் புதிய ட்ரெண்டை ஏற்படுத்தும் அஞ்சலி!

06 ஜூன், 2013 - 05:39 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் வளர்ந்து ஆளானபோதும் தாய்மொழியான தெலுங்குதான் இனி தனக்கு முழுநேர சினிமா என்ற முடிவுக்கு வந்து விட்டார் அஞ்சலி. இதற்கு முக்கிய காரணம், தமிழில் திறமையான நடிகை என்று பெயரெடுத்துவிட்ட அஞ்சலிக்கு கோலிவுட் படாதிபதிகள் உரிய சன்மானம் கொடுக்காததுதானாம். அதோடு அவரை விட ஜூனியர் நடிகைகளுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்கும் படாதிபதிகள் அவர்களில் பாதியை அஞ்சலிக்கு தருவதற்குகூட தயங்கினார்களாம்.

அதனால்தான், தனக்கு மரியாதை இல்லாத கோலிவுட்டை சீக்கிரம் காலி பண்ணி விட வேண்டும் என்று ஒரு வருடமாக யோசித்து வந்த அஞ்சலி, சமீபத்தில் சித்தியுடன ஏற்பட்ட மோதலை அதற்கு சரியான சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டதாக கூறியுள்ளார். மேலும், தற்போது முழுநேர ஆந்திர நடிகையாகியிருக்கும் அவர், தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் ஒரு கிளுகிளுப்பு பாடல் மற்றும் ஒரு முத்தக்காட்சி என்பதை ஒரு பாணியாகவே கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறாராம்.

அஞ்சலியின் இந்த அணுகுமுறை அங்குள்ள இயக்குனர்களுக்கு ரொம்ப பிடித்து விட்டதோடு, கவர்ச்சிக்கு தயங்கும், அமலாபால், சமந்தா போன்ற நடிகைகளுக்கு அஞ்சலி எவ்வளவோ பெஸ்ட் என்று அவரை போட்டி போட்டு புக் பண்ணுகிறார்களாம். இதனால், தெலுங்கில் அஞ்சலியின் மார்க்கெட் ஏறுமுகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறதாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)