நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
இளம் வயதிலேயே இசையில் சாதனை படைத்தவர் சென்னையை சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். மோகன்லால் இயக்கிய 'பரோஸ்' படத்தின் மூலம் இசை அமைப்பாளர் ஆனார். இதற்கிடையில் லிடியன், சிம்பொனி இசை அமைக்க இருப்பதாகவும், அவரை இளையராஜா சிம்பொனி இசை அமைக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் நேற்று தகவல்கள் வெளியானது.
ஆனால் இதனை இளையராஜா மறுத்துள்ளார். லிடியன் அமைத்திருப்பது சிம்பொனி அல்ல வெறும் சினிமா இசை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது "லிடியன் நாதஸ்வரம் என்னிடம் இசை கற்க வந்தவர். ஒருமுறை நான் சிம்பொனிக்கு கம்போஸ் பண்ணியிருக்கேன் என்று ஒரு இசையை போட்டு காட்டினார். 20 விநாடி அதை கேட்டுவிட்டு இதென்ன சினிமா பின்னணி இசை மாதிரி பண்ணியிருக்கிறாய், இது தப்பாச்சே, இது சிம்பொனி இல்லை. முதலில் சிம்பொனி என்றால் என்ன என்று தெரிந்துகொள் அதன் பிறகு கம்போஸ் பண்ணு என்று சொன்னேன். சினிமா பின்னணி இசை போன்ற ஒன்றை பண்ணிவிட்டு அதை என்னிடம் ஒப்புதல் பெறுவதற்காக, எனது அங்கீகாரத்திற்காக கொண்டு வந்தார். அது சிம்பொனி இல்லை, சிம்பொனி கற்றுக் கொள் என்று அவருக்கு வழிகாட்டினேன்" என்றார்.