விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

கன்னடத்தில் சில படங்களில் நடித்திருப்பவர் ரன்யா ராவ். இவர் தமிழில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த வாகா என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் கடந்த 2016ம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த நிலையில் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் ரன்யா ராவை துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்துள்ளார்கள். தனது பெல்ட்டில் 14 கிலோ தங்க கட்டிகள், 800 கிராம் தங்க நகைகளை அவர் பதுக்கி வைத்துள்ளார். அதோடு ரன்யா ராவ் கர்நாடகத்தைச் சேர்ந்த டிஜிபி ராமச்சந்திர ராவ் என்பவரின் மகள் ஆவார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் ரன்யாராவ் டிஜிபியின் மகள் என்பதால் அவருக்கு வழக்கமான சோதனைகள் மட்டுமே கடந்த காலங்களில் நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக தொடர்ந்து இது போன்ற தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்த அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதின் பேரிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.