ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
கன்னடத்தில் சில படங்களில் நடித்திருப்பவர் ரன்யா ராவ். இவர் தமிழில் ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த வாகா என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இந்த படம் கடந்த 2016ம் ஆண்டு திரைக்கு வந்தது. இந்த நிலையில் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் ரன்யா ராவை துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கைது செய்துள்ளார்கள். தனது பெல்ட்டில் 14 கிலோ தங்க கட்டிகள், 800 கிராம் தங்க நகைகளை அவர் பதுக்கி வைத்துள்ளார். அதோடு ரன்யா ராவ் கர்நாடகத்தைச் சேர்ந்த டிஜிபி ராமச்சந்திர ராவ் என்பவரின் மகள் ஆவார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் ரன்யாராவ் டிஜிபியின் மகள் என்பதால் அவருக்கு வழக்கமான சோதனைகள் மட்டுமே கடந்த காலங்களில் நடத்தப்பட்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக தொடர்ந்து இது போன்ற தங்க கடத்தலில் ஈடுபட்டு வந்த அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதின் பேரிலேயே இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.