ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

மலையாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குஞ்சாக்கோ போபன், பிரியாமணி நடிப்பில் 'ஆபிசர் ஆன் டூட்டி' என்கிற படம் வெளியானது. ஒரு போலீஸ் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படமாக ரசிகர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக உருவாக்கப்பட்டிருந்த இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. குறிப்பாக இதுவரை சாக்லேட் ஹீரோவாக பார்த்து வந்த குஞ்சாக்கோ போபன் இந்த படத்தில் ரப் அண்ட் போலீஸ் அதிகாரியாக வித்தியாசமாக காட்சி அளித்தார். அதுமட்டுமல்ல ஒரு டீன் ஏஜ் குழந்தைக்கு தந்தையான அவர் இரண்டு இளம் பெண்கள் உள்ளிட்ட ஆறு டீன் ஏஜ் இளைஞர்களின் அடாவடிகளை எதிர்கொண்டு அவர்களை அதிரடியாக விரட்டி தாக்கும் காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக அமைந்தன.
இந்த ஆறு இளைஞர்களில் அவர்களது கேங் லீடராக நடித்திருந்தவர் நடிகர் ரம்ஜான். வளர்ந்து வரும் இளம் நடிகரான இவர் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அப்போது தான் சிறுவயதாக இருந்த போது அதாவது 2011ல் குஞ்சாக்கோ போபன் நடித்த 'த்ரீ கிங்ஸ்' மற்றும் 'டாக்டர் லவ்' ஆகிய படங்களில் சிறுவயது குஞ்சாக்கோபன் கதாபாத்திரத்தில் நடித்திருந்ததாக ஒரு தகவலை சொன்னார்.
இதைக் கேட்ட குஞ்சாக்கோ போபன் ரொம்பவே ஆச்சரியப்பட்டு போனார். தன்னுடன் படத்தில் வில்லனாக மோதிய இளைஞன் தன்னுடைய சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்தவனா என்கிற விஷயம் படப்பிடிப்பு சமயத்தில் கூட தெரியாமல், படம் வெளியாகி இத்தனை நாட்களுக்கு பிறகு தெரியவந்ததில் அவர் நிஜமாகவே ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார். இந்த விஷயத்தை ஏன் முன்கூட்டியே சொல்லவில்லை என்று அவரை அன்பாக கடிந்தும் கொண்டார் குஞ்சாக்கோ போபன்.