ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு | விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி |
சமீபத்தில் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன், பிரியாமணி நடிப்பில் 'ஆபீஸர் ஆன் டூட்டி' என்கிற திரைப்படம் வெளியானது. இதில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்கள் உள்ளிட்ட சில டீனேஜ் இளைஞர்கள் அதை விற்கும்போதும் அதன்பிறகு தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்கும் போதும் சில வேண்டத்தகாத செயல்களை செய்கின்றனர். அவர்களை பிடிக்கும் பணியில் இறங்குகிறார் ரப் அன்ட் டப்பான போலீஸ் அதிகாரியான குஞ்சாக்கோ போபன். 'நான் மகான் அல்ல' படத்திற்குப் பிறகு தவறு செய்யும் டீன் ஏஜ் இளைஞர்களை நாயகன் துவைத்து எடுக்கும் காட்சிகளுக்கு கைதட்டல் கிடைத்தது என்றால் அது இந்த படமாக தான் இருக்கும். அந்த அளவிற்கு தத்ரூபமான வில்லத்தனமான நடிப்பை இதில் நடித்த டீனேஜ் இளைஞர்கள் அனைவரும் வழங்கியிருந்தனர்.
சமீபத்தில் அவர்கள் அளித்த பேட்டியில், “இந்த படத்தில் நாங்கள் அடிக்கடி போதைப்பொருள் உபயோகிப்பதாக காட்சிகள் நிறைய இருக்கும். அதற்காக நாங்கள் படப்பிடிப்பின் போது குளுக்கோஸ் பவுடரை கொட்டி அதை நுகர்வது போல காட்சிகள் படமாக்கப்பட்டன. ஆனால் அடிக்கடி அதை நுகர்ந்ததால் அதன் இனிப்பு தன்மை அதிகமாக ஏறி தொண்டையில் சென்று அடைத்துக் கொண்டது. அதன்பிறகு அன்றைய தினம் இரவு முழுவதும் தலைவலியால் மிகவும் அவதிப்பட்டோம். இந்த குளுக்கோஸை பயன்படுத்தி நடிக்கும் போதெல்லாம் ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்தது. ஆனால் படம் வெற்றியடைந்து எங்களது காட்சிகளுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைப்பதை பார்க்கும்போது அதெல்லாம் பெரிய விஷயமாகவே தெரியவில்லை” என்று கூறியுள்ளனர்.