யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நடிகர்கள் மோகன்லால் - சீனிவாசன் இருவரின் கூட்டணியில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வந்திருக்கின்றன. இதில் பல படங்களுக்கு சீனிவாசனே கதை எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மோகன்லாலும், சீனிவாசனும் இணைந்து நடித்த 'ஒரு நாள் வரும்' என்கிற திரைப்படம் கடந்த 2010ல் வெளியானது. அதன்பிறகு கடந்த 15 வருடங்களாக இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.
இடையில் இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு அதனால் இணைந்து நடிக்கவில்லை என்றும் அதன்பிறகு சீனிவாசனின் உடல்நல குறைவு காரணமாக அவர் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார் என்பதாலும் இவர்கள் இணைந்து நடிக்க முடியாமல் போனது என்றும் சொல்லப்பட்டது. அதே சமயம் சீனிவாசன் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை மோகன்லால் நேரில் சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் மோகன்லால் நடித்து வரும் ஹிருதயபூர்வம் என்கிற படத்தில் சீனிவாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார்.
படப்பிடிப்பு தளத்தில் இவர்கள் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அந்த படத்தில் நடித்து வரும் பிரேமலு புகழ் நடிகர் சங்கீத் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு மில்லியன் டாலர் புகைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக சத்யன் அந்திக்காடு இயக்கத்திலேயே மோகன்லால்-சீனிவாசன் நடித்த நாடோடிக்காட்டு திரைப்படம் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.