‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
லஷ்மண் உடேகர் இயக்கத்தில், விக்கி கவுஷல், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த ஹிந்திப் படம் 'ச்சாவா'. மராத்திய மன்னரான சத்ரபதி சம்பாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்றை மையப்படுததிய சரித்திரப் படமாக வெளிவந்த இந்தப் படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.
இந்தப் படத்தில் இடம் பெற்ற கனோஜி, கன்ஹோஜி ஷிர்கே கதாபாத்திரங்களைத் தவறுதலாகக் காட்டியிருப்பதைக் கண்டித்து அவர்களது சந்ததியினர் 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளனர். படத்தில் அவர்கள்தான் சம்பாஜி மகாராஜை முகலாயர்களிடம் காட்டிக் கொடுத்ததாகவும், அதுதான் அரை கொடூரமாக தூக்கிலிடக் காரணமாக வழிவகுத்தது என காட்டப்பட்டுள்ளது.
வரலாற்றைத் திரித்து, தவறான சித்தரிப்புகளால் தங்களது குடும்ப நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக 'ச்சாவா' தயாரிப்பாளர்களை ஷிர்கே சந்ததியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். பிப்ரவரி 20ம் தேதி அவர்கள் இயக்குனர் லஷ்மண் உடேகருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ஷிர்கே சந்ததியைச் சேர்ந்த பூஷன் ஷிர்கே என்பரை அணுகி இயக்குனர் லஷ்மண் உடேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். “ஷிர்கே குடும்பத்தின் உணர்வுகளைப் புண்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. படம் ஏதேனும் அசௌகரியத்தை ஏற்படுத்தி இருந்தால், நான் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 'ச்சாவா' படத்தில் கனோஜி மற்றும், கன்ஹோஜி பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர்களின் குடும்பப் பெயரையோ அல்லது அவர்களின் கிராமத்தையோ குறிப்பிடவில்லை,” என்று கூறியுள்ளார்.
இருந்தாலும் 'ச்சாவா' தயாரிப்பாளர்கள் சர்ச்சைக்குரிய அந்த காட்சிகளை நீக்கத் தவறினால் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என ஷிர்கே சந்ததியினர் எச்சரித்துள்ளனர்.