கேளிக்கை வரி குறைப்பு: திரைத்துறையினர் மகிழ்ச்சி | தள்ளிப்போனது இளையராஜா பாராட்டு விழா | கமல் உடன் முத்தக்காட்சி பற்றி அபிராமி விளக்கம் | சிவனே உத்தரவிட்டு கண்ணப்பா படத்தை எடுத்ததாக உணர்கிறோம் : விஷ்ணு மஞ்சு | 10 வருட சிறந்த படங்களை அறிவித்த தெலுங்கானா அரசு | ராஜேஷ் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி | 21 படம் நடித்தும் என்ன பலன்: விஷ்ணு விஷால் பீலிங் | கிஷன் தாஸின் புதிய படம் ஆரோமலே | பென்ஸ் படத்தில் இணைந்த சம்யுக்தா மேனன் | விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : ராதிகா ஆப்தே |
கடந்த ஆண்டில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தை நாடி இருக்கும் ஜெயம் ரவி, தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றி இருப்பவர், தனது அலுவலகத்தை மும்பைக்கு மாற்றி இருக்கிறார். அதோடு எதிர்காலத்தில் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கத்திலும் அவர் தீவிர கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது புதிய படங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'ஜீனி' படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. அதையடுத்து தற்போது 'பராசக்தி, கராத்தே பாபு' என்ற இரண்டு படத்தில் நடித்து வருகிறேன். இதில் பராசக்தி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளேன். இன்னொரு பக்கம் 'கராத்தே பாபு' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கணேஷ்பாபு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதத்தோடு முடிந்துவிடும்'' என்கிறார் ரவி மோகன்.