பிரபாஸ் படத்தில் நடிக்க காரணம் இது தான் : மாளவிகா மோகனன் | நானியின் 'ஹிட்-3' படத்தின் டீசர் வெளியீடு | 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' மூன்று நாள் வசூல் எவ்வளவு? | 'கராத்தே பாபு' படம் குறித்து ரவி மோகன் வெளியிட்ட அப்டேட்! | தமிழில் சினிமாவாகும் ஹாலிவுட் வெப் தொடர் | குற்ற உணர்ச்சியில் அழ வைக்கிற மிகவும் அழகான ஒரு முயற்சி! 'டிராகன்' படத்தை பாராட்டிய வசந்த பாலன் | நிறம் மாறும் உலகில் 4 ஹீரோயின்கள் | அப்பா அம்மாவிடம் மன்னிப்பு கேட்ட 'டிராகன்' இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து! | பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரி ரகசிய திருமணம் | பாண்டிராஜ் இயக்கும் படத்தை சத்தமில்லாமல் நடித்து முடித்த விஜய் சேதுபதி! |
கடந்த ஆண்டில் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தை நாடி இருக்கும் ஜெயம் ரவி, தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றி இருப்பவர், தனது அலுவலகத்தை மும்பைக்கு மாற்றி இருக்கிறார். அதோடு எதிர்காலத்தில் நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கத்திலும் அவர் தீவிர கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் தனது புதிய படங்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ''வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'ஜீனி' படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. அதையடுத்து தற்போது 'பராசக்தி, கராத்தே பாபு' என்ற இரண்டு படத்தில் நடித்து வருகிறேன். இதில் பராசக்தி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ளேன். இன்னொரு பக்கம் 'கராத்தே பாபு' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கணேஷ்பாபு இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதத்தோடு முடிந்துவிடும்'' என்கிறார் ரவி மோகன்.