10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி | லோகேஷ் கனகராஜ், அமீர் கான் படம், பேச்சுவார்த்தையில்… | வெளியீட்டிற்குத் தடை இருந்தாலும் இன்று 'வா வாத்தியார்' நிகழ்ச்சி | ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் |

அசோக் செல்வன் நடிப்பில் 'ஓ மை கடவுளே' என்ற படத்தில் அறிமுகமானவர் அஷ்வத் மாரிமுத்து. அதையடுத்து தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 'டிராகன்' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து அவர், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் தனது அப்பா அம்மாவுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அஷ்வத் மாரிமுத்து. அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என் பெற்றோரை சந்தித்தேன். மாரிமுத்து என்கிற தனபால். மேலும் அப்பா எங்கு போனாலும் போட்டுட்டு போற ஜோல்னா பை. சித்ரா எனது அம்மா. டிராகன் படம் வெளியானதும் என் பெற்றோரை சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். காரணம் நான் பிளஸ் டூ முடித்த பிறகு அவர்கள் என்னை டாக்டராக பார்க்க விரும்பினார்கள். ஆனால் நான் இன்ஜினியரிங் மாணவராக இருந்தேன். அதற்காகத்தான் அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார் அஷ்வத் மாரிமுத்து.