நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
அதர்வா நடிக்கும் புதிய படத்திற்கு 'இதயம் முரளி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பு விழா சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. இந்த விழாவில் அதர்வா பேசியதாவது :
நீண்ட நாட்களுக்கு பிறகு காதல் படத்தில் நடித்திருக்கிறேன். காதலர் தினத்தில் படத்தின் டைட்டில் மாணவர்கள் முன்னிலையில் வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அருகில் உள்ள இன்னொரு கல்லூரியில்தான் படித்தேன். அதனால் மாணவர்களின் மனது எனக்குத் தெரியும். காதலை போன்றே வலிமையானது ஒரு தலை காதலும். ஒரு தலை காதலை கடந்துதான் எல்லோரும் வந்திருக்கிறோம்.
இதயம் முரளி என்பது எனது தந்தையை நினைவூட்டுவதாக இருந்தாலும் அந்த நோக்கத்திற்காக வைக்கவில்லை. கதைக்கு பொருத்தமான தலைப்பாகவும் இருந்தது. இதயம் முரளி என்பது தனிப்பட்ட ஒரு கேரக்டர் அல்ல. எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் இந்த படம்.
நான் நிறைய இடைவெளி விடுவதாக சொல்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இனி அடுத்தடுத்து புதிய பட அறிவிப்புகளை வெளியிடுவேன். காதலர் தினத்தில் நான் சொல்வது எல்லோரும் காதலியுங்கள் அது வெற்றி பெறலாம், தோற்கலாம். ஆனால் வாழ்க்கையில் காதல் முக்கியம். என்றார்.
இந்த படத்தில் அதர்வாவுடன் பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், பிரக்யா நக்ரா, நிஹாரிகா, ரக்ஷன், நட்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார். ஆகாஷ் பாஸ்கர் தயாரித்து, இயக்குகிறார். கோடை விடுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.