நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
அதர்வா நடிக்கும் புதிய படத்திற்கு 'இதயம் முரளி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பு விழா சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடந்தது. இந்த விழாவில் அதர்வா பேசியதாவது :
நீண்ட நாட்களுக்கு பிறகு காதல் படத்தில் நடித்திருக்கிறேன். காதலர் தினத்தில் படத்தின் டைட்டில் மாணவர்கள் முன்னிலையில் வெளியிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் அருகில் உள்ள இன்னொரு கல்லூரியில்தான் படித்தேன். அதனால் மாணவர்களின் மனது எனக்குத் தெரியும். காதலை போன்றே வலிமையானது ஒரு தலை காதலும். ஒரு தலை காதலை கடந்துதான் எல்லோரும் வந்திருக்கிறோம்.
இதயம் முரளி என்பது எனது தந்தையை நினைவூட்டுவதாக இருந்தாலும் அந்த நோக்கத்திற்காக வைக்கவில்லை. கதைக்கு பொருத்தமான தலைப்பாகவும் இருந்தது. இதயம் முரளி என்பது தனிப்பட்ட ஒரு கேரக்டர் அல்ல. எல்லோருக்குள்ளும் ஒரு இதயம் முரளி இருக்கிறார். அதன் வெளிப்பாடுதான் இந்த படம்.
நான் நிறைய இடைவெளி விடுவதாக சொல்கிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. தொடர்ந்து நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இனி அடுத்தடுத்து புதிய பட அறிவிப்புகளை வெளியிடுவேன். காதலர் தினத்தில் நான் சொல்வது எல்லோரும் காதலியுங்கள் அது வெற்றி பெறலாம், தோற்கலாம். ஆனால் வாழ்க்கையில் காதல் முக்கியம். என்றார்.
இந்த படத்தில் அதர்வாவுடன் பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், பிரக்யா நக்ரா, நிஹாரிகா, ரக்ஷன், நட்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். தமன் இசை அமைக்கிறார். ஆகாஷ் பாஸ்கர் தயாரித்து, இயக்குகிறார். கோடை விடுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.