ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு, பாயும் ஒளி நீ எனக்கு, ரெய்டு படத்தில் நடித்தார். அதன்பிறகு 'இறுகப்பற்று' படத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
மாஸ்டர், லியோ, மகான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், இந்த படம் உருவாகிறது. அவரது மகன் எல்.கே.அக்ஷய் குமாரும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனின், இணை இயக்குநரான சுரேஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்தப்படத்தின் கதையை 'டாணாக்காரன்' புகழ் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதி செய்கிறார். தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.