கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
'பொன்னியின் செல்வன்' படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு, பாயும் ஒளி நீ எனக்கு, ரெய்டு படத்தில் நடித்தார். அதன்பிறகு 'இறுகப்பற்று' படத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.
மாஸ்டர், லியோ, மகான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில், இந்த படம் உருவாகிறது. அவரது மகன் எல்.கே.அக்ஷய் குமாரும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். இயக்குனர் வெற்றிமாறனின், இணை இயக்குநரான சுரேஷ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்தப்படத்தின் கதையை 'டாணாக்காரன்' புகழ் இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதி செய்கிறார். தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.