ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா 2 என்கிற பெயரில் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியானது. முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, வில்லன் பஹத் பாசில் ஆகியோர் இந்த படத்திலும் இடம் பிடித்தனர். முதல் பாகத்தை விட மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படம் கிட்டத்தட்ட 1800 கோடிக்கு மேல் வசூலித்தது.
படம் வெளியாகி இரண்டு மாதங்கள் முடிந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சக்சஸ் மீட்டை தற்போது புஷ்பா 2 படக்குழுவினர் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்வில் அல்லு அர்ஜுன் பேசும்போது புஷ்பா 2 பட ரிலீஸுக்காக தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக் கொண்ட ஹிந்தி படக்குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இது குறித்து அவர் பேசும்போது, ‛‛எனக்கு பாலிவுட் என்கிற வார்த்தையை பயன்படுத்துவதில் பெரிய விருப்பமில்லை. புஷ்பா ரிலீஸுக்கு முன்னதாக ஹிந்தி சினிமாவை சேர்ந்த ஒருவரை நான் தொடர்பு கொண்டேன். அவர்களது திரைப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாவதாக இருந்தது. எங்களுடைய படம் அதே சமயத்தில் வெளியாக இருப்பதை அறிந்து புஷ்பா படத்திற்கு நாங்கள் எல்லாம் ரசிகர்கள் நீங்கள் வருவதாக இருந்தால் நாங்கள் தாராளமாக வழி விட்டு ஒதுங்கிக் கொள்கிறோம் என்று கூறி தங்களது படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி'' என்று கூறினார்.
அவர் சம்பந்தப்பட்ட அந்த படத்தின் பெயரை குறிப்பிடாவிட்டாலும் அவர் கூறியது விக்கி கவுசல் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி, வரும் பிப்ரவரி 14ம் தேதி வெளியாக இருக்கும் ‛ச்சாவா' படக்குழுவினர் தான் புஷ்பா 2க்காக தங்களது ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துக் கொண்டார்கள் என்று பரவலாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல ச்சாவா படத்தின் கதாநாயகியும் ராஷ்மிகா மந்தனா தான் என்பதால் அவர் மூலமாக அல்லு அர்ஜுன் இந்த முயற்சி எடுத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.