சிரஞ்சீவி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா | ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? |

அஜித் நடிப்பில் ‛விடாமுயற்சி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் அணி, 3வது இடம் பிடித்து சாதித்தது. போட்டிக்கு முன்பான பயிற்சியில் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியிருந்தது. ஆனாலும், போட்டியில் பங்கேற்று அசத்தினார். அதனைத்தொடர்ந்து தற்போது போர்ச்சுக்கலில் நடைபெற உள்ள கார் ரேஸ்க்கான பயிற்சியில் அஜித்தின் ‛அஜித்குமார் ரேஸிங்' அணி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோதும் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. 2வது முறையாக ஏற்பட்ட இந்த விபத்திலும் அஜித்குமாரின் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கார் மட்டும் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்து தொடர்பாக அஜித் அளித்துள்ள பேட்டியில், ‛‛எங்களுக்கு மீண்டும் நல்ல நேரமாக அமைந்துள்ளது. எனது கார் சிறிய அளவிலான விபத்தில் சிக்கியது. யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. எங்களது குழு விரைந்து செயல்பட்டதால் எந்த பாதிப்பும் இன்றி பயிற்சியை தொடர்கிறேன். காரை எனது மெக்கானிக் குழுவினர் சரி செய்துவிட்டனர். மீண்டும் பெருமையை நிலை நாட்டுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. விபத்து ஏற்பட்டவுடன் எங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: மோட்டார் ஸ்போர்ட்ஸில் எனது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி தருகிறது. அடுத்தடுத்து நான் பங்கேற்க இருக்கும் போட்டிகளை, ரசிகர்கள் தேடி தெரிந்து கொள்ள நினைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.