ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
அஜித் நடிப்பில் ‛விடாமுயற்சி' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் அணி, 3வது இடம் பிடித்து சாதித்தது. போட்டிக்கு முன்பான பயிற்சியில் அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கியிருந்தது. ஆனாலும், போட்டியில் பங்கேற்று அசத்தினார். அதனைத்தொடர்ந்து தற்போது போர்ச்சுக்கலில் நடைபெற உள்ள கார் ரேஸ்க்கான பயிற்சியில் அஜித்தின் ‛அஜித்குமார் ரேஸிங்' அணி தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கான பயிற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோதும் அஜித்தின் கார் விபத்தில் சிக்கியது. 2வது முறையாக ஏற்பட்ட இந்த விபத்திலும் அஜித்குமாரின் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படவில்லை. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கார் மட்டும் பலத்த சேதம் அடைந்தது.
இந்த விபத்து தொடர்பாக அஜித் அளித்துள்ள பேட்டியில், ‛‛எங்களுக்கு மீண்டும் நல்ல நேரமாக அமைந்துள்ளது. எனது கார் சிறிய அளவிலான விபத்தில் சிக்கியது. யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. எங்களது குழு விரைந்து செயல்பட்டதால் எந்த பாதிப்பும் இன்றி பயிற்சியை தொடர்கிறேன். காரை எனது மெக்கானிக் குழுவினர் சரி செய்துவிட்டனர். மீண்டும் பெருமையை நிலை நாட்டுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. விபத்து ஏற்பட்டவுடன் எங்களுக்கு உறுதுணையாக இருந்த நண்பர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.
மேலும் அவர் கூறியதாவது: மோட்டார் ஸ்போர்ட்ஸில் எனது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி தருகிறது. அடுத்தடுத்து நான் பங்கேற்க இருக்கும் போட்டிகளை, ரசிகர்கள் தேடி தெரிந்து கொள்ள நினைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.