டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
திருச்சியில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் போதே டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றவர் சிவகார்த்திகேயன். அப்படியே அதே டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆறு வருடங்கள் பணியாற்றினார். இடையில் எம்பிஏவும் படித்து முடித்தவர், 2012 பிப்ரவரி 3ம் தேதி வெளிவந்த 'மெரினா' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
அதன்பின் “எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், மாவீரன்,' என வெற்றிப் படங்களில் நடித்தார். கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'அமரன்' படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவில் தற்போது டாப் 10 பட்டியலில் இருக்கும் சிவகார்த்திகேயன் சினிமாவில் வந்து இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகிறது. இப்போது அவர் 24 மற்றும் 25வது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 25வது படமாக 'பராசக்தி' படம் உருவாகி வருகிறது.
சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், தனது திறமையால், கடுமையான உழைப்பின் மூலம் முன்னேறியுள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ள ஒருவராக இருக்கிறார்.