கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் | மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் ஒலிக்காத நாளே இல்லை ; சிலாகித்த நயன்தாரா | கேரள முதல்வரின் சொந்த ஊர் கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் | கிடப்பில் இருக்கும் பிரபுதேவா படத்தை வெளியிட முயற்சி |
திருச்சியில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருக்கும் போதே டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்றவர் சிவகார்த்திகேயன். அப்படியே அதே டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆறு வருடங்கள் பணியாற்றினார். இடையில் எம்பிஏவும் படித்து முடித்தவர், 2012 பிப்ரவரி 3ம் தேதி வெளிவந்த 'மெரினா' படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.
அதன்பின் “எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, டாக்டர், டான், மாவீரன்,' என வெற்றிப் படங்களில் நடித்தார். கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'அமரன்' படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வசூல் சாதனை படைத்தது.
தமிழ் சினிமாவில் தற்போது டாப் 10 பட்டியலில் இருக்கும் சிவகார்த்திகேயன் சினிமாவில் வந்து இன்றுடன் 13 வருடங்கள் நிறைவடைகிறது. இப்போது அவர் 24 மற்றும் 25வது படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 25வது படமாக 'பராசக்தி' படம் உருவாகி வருகிறது.
சினிமாவில் எந்தவிதமான பின்புலமும் இல்லாமல், தனது திறமையால், கடுமையான உழைப்பின் மூலம் முன்னேறியுள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ள ஒருவராக இருக்கிறார்.