கண்ணப்பா படத்தில் ருத்ராவாக பிரபாஸ் | சிவகார்த்திகேயனை இயக்கும் அஹமது | லிமிட் தாண்டினால் தடை: மகளுக்கு எச்சரிக்கை விடுத்த இயக்குனர் | பிளாஷ்பேக்: சவுராஷ்டிர மொழி சொற்கள் இடம்பெற்ற ஒரே தமிழ் திரையிசைப் பாடல் | இளையராஜா முன் அவரது பாடல்களுக்கு நடனமாடி வசீகரித்த ரஷ்ய கலைஞர்கள் | நடிகராக 50வது படம், தயாரிப்பாளராக மாறிய சிம்பு | சங்கராந்திகி வஸ்துனம் - ஒரே மொழியில் வெளியாகி 300 கோடி வசூல் | புனித் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 வருடம் கழித்து வெளியிடப்பட்ட பாடல் | நடிகர் முகேஷ் மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்கு | சினிமாவில் 13 ஆண்டுகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இன்று அவருடைய 43வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு நள்ளிரவில் அவருடைய 49வது படத்தின் அறிவிப்பு வெளியானது. 'பார்க்கிங்' படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் அப்படத்தை இயக்குகிறார்.
அதற்கடுத்து சற்று முன் அவருடைய 50வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இப்படத்தைத் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான அட்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கிறார் சிம்பு. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்க யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. அது குறித்த அறிவிப்பும் வெளியானது. ஆனால், அதன்பின் அதிலிருந்து கமல் விலகிவிட்டார். பின்னர் வேறு தயாரிப்பாளர்களிடமும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சிம்புவே தயாரிப்பில் இறங்கிவிட்டார். இப்படம் ஒரு சரித்திரப் படமாக எடுக்கப்பட உள்ளது.
சிம்புவின் பிறந்தநாளில் அடுத்தடுத்து அவரது 49 மற்றும் 50வது படங்களின் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.