என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிம்பு. இன்று அவருடைய 43வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு நள்ளிரவில் அவருடைய 49வது படத்தின் அறிவிப்பு வெளியானது. 'பார்க்கிங்' படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் அப்படத்தை இயக்குகிறார்.
அதற்கடுத்து சற்று முன் அவருடைய 50வது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இப்படத்தைத் தனது சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான அட்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து நடிக்கிறார் சிம்பு. 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இப்படத்தை இயக்க யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. அது குறித்த அறிவிப்பும் வெளியானது. ஆனால், அதன்பின் அதிலிருந்து கமல் விலகிவிட்டார். பின்னர் வேறு தயாரிப்பாளர்களிடமும் பேசப்பட்டு வந்தது. இந்நிலையில் சிம்புவே தயாரிப்பில் இறங்கிவிட்டார். இப்படம் ஒரு சரித்திரப் படமாக எடுக்கப்பட உள்ளது.
சிம்புவின் பிறந்தநாளில் அடுத்தடுத்து அவரது 49 மற்றும் 50வது படங்களின் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.