பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் அவ்வப்போது நடிப்பவர் தற்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். சமந்தாவுக்கும் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகத் தற்போது செய்திகள் பரவி வருகின்றன.
நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து பிரிந்தவர் சமந்தா. நாக சைதன்யா சில மாதங்களுக்கு முன்பு நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அதற்குரிய சிகிச்சைகளைப் பெற்று வந்தார் சமந்தா.
இயக்குனர் ராஜ் நிடிமொரு மற்றும் கிருஷ்ணா டி.கே இருவரும் ராஜ் - டிகே என்ற பெயரில் சில படங்களையும், 'பேமிலி மேன், பார்சி, சிட்டாடல் ஹன்னி பன்னி' உள்ளிட்ட வெப் தொடர்களையும் இயக்கியுள்ளார்கள். 'பேமிலி மேன், சிட்டாடல் ஹன்னி பன்னி' ஆகிய தொடர்களில் சமந்தா நடித்துள்ளார். அப்போது சமந்தாவுக்கும், ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்கிறார்கள்.
'பிக்கல்பால்' என்ற புதிய விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட 'வேர்ல்டு பிக்கல்பால் லீக்' என்ற போட்டியில் சென்னை அணியின் உரிமையாளராக இருக்கிறார். இந்த போட்டிகள் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றன. அப்போது சமந்தா மற்றும் டிகே ஒன்றாக வந்தது அவர்களுக்கிடையிலான காதலைப் பற்றி வெளிப்படுத்துவதாக உள்ளதென பேசப்பட்டுள்ளது.