படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தமிழில் அவ்வப்போது நடிப்பவர் தற்போது ஹிந்தியிலும் நடித்து வருகிறார். சமந்தாவுக்கும் இயக்குனர் ராஜ் நிடிமொரு என்பவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாகத் தற்போது செய்திகள் பரவி வருகின்றன.
நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து பிரிந்தவர் சமந்தா. நாக சைதன்யா சில மாதங்களுக்கு முன்பு நடிகை சோபிதா துலிபலாவைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் அதற்குரிய சிகிச்சைகளைப் பெற்று வந்தார் சமந்தா.
இயக்குனர் ராஜ் நிடிமொரு மற்றும் கிருஷ்ணா டி.கே இருவரும் ராஜ் - டிகே என்ற பெயரில் சில படங்களையும், 'பேமிலி மேன், பார்சி, சிட்டாடல் ஹன்னி பன்னி' உள்ளிட்ட வெப் தொடர்களையும் இயக்கியுள்ளார்கள். 'பேமிலி மேன், சிட்டாடல் ஹன்னி பன்னி' ஆகிய தொடர்களில் சமந்தா நடித்துள்ளார். அப்போது சமந்தாவுக்கும், ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்ததாகச் சொல்கிறார்கள்.
'பிக்கல்பால்' என்ற புதிய விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட 'வேர்ல்டு பிக்கல்பால் லீக்' என்ற போட்டியில் சென்னை அணியின் உரிமையாளராக இருக்கிறார். இந்த போட்டிகள் சமீபத்தில் மும்பையில் நடைபெற்றன. அப்போது சமந்தா மற்றும் டிகே ஒன்றாக வந்தது அவர்களுக்கிடையிலான காதலைப் பற்றி வெளிப்படுத்துவதாக உள்ளதென பேசப்பட்டுள்ளது.