விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பிஸியாக வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். தற்போது 'கிங்ஸ்டன்' எனும் அவரது 25வது படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஜி.வி. பிரகாஷ் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, "அமரன் படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கமல் மாதிரி தயாரிப்பாளர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் சினிமா எடுப்பார்கள். அவர் ஜெயிக்க வேண்டும் என விரும்பினேன்.
என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை கமல் தான் தொடங்கி வைக்க வேண்டும் என விரும்பினேன். அதை அவரிடம் சொன்னதும் உடனே கலந்து கொண்டு கிளாப் அடித்து துவங்கி வாழ்த்தினார். கமலுக்கு என்மீது அன்பும், அக்கறையும் உண்டு. ஒரு போராட்டத்திற்கு நான் குரல் கொடுத்த போது என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். ரொம்ப தைரியமாக பண்ணுறீங்க. உங்கள் அரசியல் பார்வை ரொம்ப பிடித்துள்ளது, " என தெரிவித்துள்ளார்.