என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பிஸியாக வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். தற்போது 'கிங்ஸ்டன்' எனும் அவரது 25வது படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஜி.வி. பிரகாஷ் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, "அமரன் படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கமல் மாதிரி தயாரிப்பாளர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் சினிமா எடுப்பார்கள். அவர் ஜெயிக்க வேண்டும் என விரும்பினேன்.
என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை கமல் தான் தொடங்கி வைக்க வேண்டும் என விரும்பினேன். அதை அவரிடம் சொன்னதும் உடனே கலந்து கொண்டு கிளாப் அடித்து துவங்கி வாழ்த்தினார். கமலுக்கு என்மீது அன்பும், அக்கறையும் உண்டு. ஒரு போராட்டத்திற்கு நான் குரல் கொடுத்த போது என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். ரொம்ப தைரியமாக பண்ணுறீங்க. உங்கள் அரசியல் பார்வை ரொம்ப பிடித்துள்ளது, " என தெரிவித்துள்ளார்.