ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | தமிழகம் எனக்கு உறுதுணையாக உள்ளது : நன்றி சொன்ன கமல் | விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்? | விக்ரம் சுகுமாரன் மறைவுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான மதயானை கூட்டம் | தாரே ஜமீன் பர் படத்தை யு-டியூப்பில் இலவசமாக வெளியிடும் அமீர்கான் | அறிவுரை சொல்பவர்கள் முதலில் தாங்கள் ஒழுங்கானவர்களா? : நடிகர் விநாயகன் கிண்டல் | அவசர அவசரமாக முடிக்கப்பட்ட பாலியல் வழக்குகள் ; அரசுக்கு எதிராக பார்வதி காட்டம் | ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' |
இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பிஸியாக வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். தற்போது 'கிங்ஸ்டன்' எனும் அவரது 25வது படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக ஜி.வி. பிரகாஷ் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் அமரன் படத்தின் தயாரிப்பாளர் கமல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, "அமரன் படம் மாபெரும் வெற்றி பெற்றதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். கமல் மாதிரி தயாரிப்பாளர்கள் வெற்றி பெற்றால் மீண்டும் சினிமா எடுப்பார்கள். அவர் ஜெயிக்க வேண்டும் என விரும்பினேன்.
என் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தை கமல் தான் தொடங்கி வைக்க வேண்டும் என விரும்பினேன். அதை அவரிடம் சொன்னதும் உடனே கலந்து கொண்டு கிளாப் அடித்து துவங்கி வாழ்த்தினார். கமலுக்கு என்மீது அன்பும், அக்கறையும் உண்டு. ஒரு போராட்டத்திற்கு நான் குரல் கொடுத்த போது என்னைக் கூப்பிட்டு பாராட்டினார். ரொம்ப தைரியமாக பண்ணுறீங்க. உங்கள் அரசியல் பார்வை ரொம்ப பிடித்துள்ளது, " என தெரிவித்துள்ளார்.