விஜயின் த.வெ.க கட்சியில் இணையும் திரை பிரபலம் | நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சாமுண்டீஸ்வரி கோவிலில் வழிபட்ட ரன்வீர் சிங் | போலீஸ் ஸ்டேஷனில் எங்களை மிரட்டி எழுதி வாங்கினார்கள் : திரிஷ்யம் நடிகை குற்றச்சாட்டு. | விவாகரத்துக்கு பிறகு ரூ.120 கோடி கேட்கும் முன்னாள் மனைவி அம்ரிதா : பாலா கண்ணீர் பேட்டி | கிராமத்துக் கதையில் நாயகனாக நடிக்கும் ரகுமான் | ஊர்வசியுடன் நடிக்க பயம் : ஜெயராம் | காஷ்மீர் பள்ளிக்கு ஒரு கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார் | ருக்மணி வசந்த் கவர்ச்சி படங்களை வெளியிட்ட இருவர் பிடிபட்டனர் | பிளாஷ்பேக் : ரஜினியை ஹீரோவாகிய இயக்குனரை பற்றி தெரியுமா? | பிளாஷ்பேக் : எங்கே மோகனா? |

பிரேம் ஆனந்த் இயக்கத்தில், சந்தானம், கீத்திகா திவாரி, கவுதம் மேனன், செல்வராகவன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்கள்.
சந்தானம் நடித்து இதற்கு முன்பு 2016ல் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்களை அடுத்து மூன்றாவது பாகமாக இந்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் உருவாகி வருகிறது. முதலிரண்டு பாகங்களைப் போலவே இந்தப் படமும் நகைச்சுவை கலந்த பேய்ப் படம்தான்.
சந்தானம் நகைச்சுவை வேடத்தில் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த 'மத கஜ ராஜா' படம் வெற்றி பெற்றது. அதனால், இந்த 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திற்கும் இப்போதே எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.




