காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் டிசம்பர் 5ம் தேதி வெளியான படம் 'புஷ்பா 2'. படம் வெளியான முதல் நாளிலிருந்தே வசூல் சாதனையைப் படைத்து வந்தது.
தற்போது 50வது நாளை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. 1900 கோடி ரூபாய் வசூலைக் கடந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்குத் திரையுலகத்தில் 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு அதிக வசூலைக் குவித்த படமாக இருக்கிறது.
கடந்த 50 நாட்களில் தெலுங்கில் சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் 'புஷ்பா 2' படத்திற்கான வரவேற்பு குறையாமல் இருந்தது. தெலுங்கு நடிகர்களில் பிரபாஸூக்கு அடுத்து அதிக வசூலைக் குவித்த நடிகர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் அல்லு அர்ஜுன். இந்த வசூல் சாதனையை ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோரும் பெற முடியவில்லை.