போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பாலிவுட் நடிகரான சைப் அலிகான் கடந்த வாரம் அவரது வீட்டில் திருட வந்த ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுசை சிகிச்சை முடிந்த பின் நேற்று வீட்டிற்குத் திரும்பினார்.
தற்போது அவருடைய வீட்டிற்கான பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளார் சைப் அலிகான். பாலிவுட் நடிகரான ரோனித் ராய்க்கு சொந்தமான செக்யூரிட்டி நிறுவனம் அவரது வீட்டு பாதுகாப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாம். இதற்காக ரோனித் ராய் நேற்று சைப் அலிகானை சந்தித்துப் பேசியுள்ளார். அமிதாப்பச்சன், ஷாரூக்கான், அமீர்கான் ஆகியோரது வீட்டிற்கு ரோனித் ராயின் செக்யூரிட்டி நிறுவனம்தான் பாதுகாப்பை அளித்து வருகிறது.
சைப் அலிகான் வீட்டில் நடந்த திருட்டு முயற்சியும் அதனால் நடந்த கத்திக்குத்து சம்பவமும் பாலிவுட் பிரபலங்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.