எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் சினிமாவின் இயக்குனரும், தயாரிப்பாளருமான ஜெயமுருகன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
திருப்பூரை சேர்ந்த டி.எம் ஜெயமுருகன் 1995ல் 'சிந்து பாத்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். முரளி நடித்த ‛ரோஜா மலரே' படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். தொடர்ந்து, அடடா என்ன அழகு, தீ இவன் போன்ற படங்களையும் இயக்கினார். தனது படம் உட்பட ஓரிரு படங்களுக்கு இசையமைக்கவும் செய்தார்.
ஒருக்கட்டத்தில் சினிமாவை விட்டு விலகி திருப்பூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி காலமானார். திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது உடல். இறுதிச்சடங்கு இன்று மாலை நடக்கிறது.