பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

நடிகை நயன்தாரா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி படங்களும் அவ்வப்போது தயாரித்து வருகிறார். அதோடு சில பிஸ்னஸ்களும் செய்து வரும் நயன்தாரா, கடந்த ஆண்டில் பெமி 9 என்கிற நிறுவனத்தை தொடங்கினார் . அந்த நிறுவனம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து மதுரையில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் நயன்தாரா. அதில் முகவர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா பேசும்போது, என்னுடைய வாழ்க்கையில் நான் நம்பக்கூடிய இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று தன்னம்பிக்கை, இன்னொன்று சுயமரியாதை. இது இரண்டும் இருந்தால் நம்மை யார் கீழே இறக்க வேண்டும் என்று நினைத்தாலும் நாம் முன்னேறிக் கொண்டே தான் இருப்போம். யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும் தவறாக நடந்து கொண்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் நாம் நேர்மையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தன்னம்பிக்கையை மட்டும் விடக்கூடாது. ஓயாமல் உழைத்துக் கொண்டே இருந்தால் அது உங்களது வாழ்க்கையை பெரிய அளவில் உயர்த்தி விடும் என்றார் நயன்தாரா. அவரது இந்த பேச்சு அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.