காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
நடிகை நயன்தாரா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி படங்களும் அவ்வப்போது தயாரித்து வருகிறார். அதோடு சில பிஸ்னஸ்களும் செய்து வரும் நயன்தாரா, கடந்த ஆண்டில் பெமி 9 என்கிற நிறுவனத்தை தொடங்கினார் . அந்த நிறுவனம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து மதுரையில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் நயன்தாரா. அதில் முகவர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா பேசும்போது, என்னுடைய வாழ்க்கையில் நான் நம்பக்கூடிய இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று தன்னம்பிக்கை, இன்னொன்று சுயமரியாதை. இது இரண்டும் இருந்தால் நம்மை யார் கீழே இறக்க வேண்டும் என்று நினைத்தாலும் நாம் முன்னேறிக் கொண்டே தான் இருப்போம். யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும் தவறாக நடந்து கொண்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் நாம் நேர்மையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தன்னம்பிக்கையை மட்டும் விடக்கூடாது. ஓயாமல் உழைத்துக் கொண்டே இருந்தால் அது உங்களது வாழ்க்கையை பெரிய அளவில் உயர்த்தி விடும் என்றார் நயன்தாரா. அவரது இந்த பேச்சு அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.