ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

நடிகை நயன்தாரா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி படங்களும் அவ்வப்போது தயாரித்து வருகிறார். அதோடு சில பிஸ்னஸ்களும் செய்து வரும் நயன்தாரா, கடந்த ஆண்டில் பெமி 9 என்கிற நிறுவனத்தை தொடங்கினார் . அந்த நிறுவனம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றதை அடுத்து மதுரையில் ஒரு நிகழ்ச்சி நடத்தினார் நயன்தாரா. அதில் முகவர்கள், விநியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் நயன்தாரா பேசும்போது, என்னுடைய வாழ்க்கையில் நான் நம்பக்கூடிய இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று தன்னம்பிக்கை, இன்னொன்று சுயமரியாதை. இது இரண்டும் இருந்தால் நம்மை யார் கீழே இறக்க வேண்டும் என்று நினைத்தாலும் நாம் முன்னேறிக் கொண்டே தான் இருப்போம். யார் நம்மை கீழ்த்தரமாக பேசினாலும் தவறாக நடந்து கொண்டாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் நாம் நேர்மையாக உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தன்னம்பிக்கையை மட்டும் விடக்கூடாது. ஓயாமல் உழைத்துக் கொண்டே இருந்தால் அது உங்களது வாழ்க்கையை பெரிய அளவில் உயர்த்தி விடும் என்றார் நயன்தாரா. அவரது இந்த பேச்சு அனைவராலும் கவனிக்கப்பட்டு வருகிறது.




