அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி நடித்து நேற்று பான் இந்தியா படமாக வெளிவந்த படம் 'கேம் சேஞ்ஜர்'. இப்படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியுள்ளார். ஷங்கரின் முதல் படமான 'ஜென்டில்மேன்' படம் முதல் அவரது இயக்கத்தில் வெளிவந்த படங்களிலிருந்தே ஒரு கதையை உருவாக்கி இந்த 'கேம் சேஞ்ஜர்' படத்திற்குக் கதையைக் கொடுத்துள்ளார் கார்த்திக் சுப்பராஜ் என்றுதான் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தான் கதை எழுதிய படத்தைத் தானே புகழ்ந்து பதிவிட்டுள்ளார் கார்த்திக் சுப்பராஜ். “கேம் சேஞ்ஜர்' ஷங்கர் சாரின் 'வின்டேஜ்' பிரம்மாண்ட மாஸ் ஆக்ஷன் மற்றும் அரசியல் வசனங்களுடன் சூப்பர் என்டர்டெயின்மென்ட்டாக உள்ளது. ராம் சரண் சார், எஸ்ஜே சூர்யா சார் ஆகியோரது நடிப்பு பிரமாதம். ஒளிப்பதிவாளர் திரு விஷுவல் ட்ரீட் தந்துள்ளார். இந்த பெரிய பார்வையில் என்னையும் ஒரு சிறு பகுதியாக என்னை சேர்த்துக் கொண்டதற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.