இயக்குனர் பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது : இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தகவல் | இந்திய பாக்ஸ் ஆபீஸ் 2025 : எத்தனை கோடி வசூல் தெரியுமா ? | அதிக சதவீதம் கேட்கும் 'ஜனநாயகன்' ; தயங்கும் தியேட்டர் உரிமையாளர்கள் : பிரச்னை தீருமா? | 'பராசக்தி' படத்தில் அண்ணாதுரை... கருணாநிதியும் இருக்கிறாரா? | 2வது படத்திலேயே ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெற்ற சிபி சக்கரவர்த்தி | ரத்தக்கண்ணீருக்கு புதிய அங்கீகாரம் | ஓடிடி டிரெண்டிங்கில் 'பகவந்த் கேசரி' | பொங்கல் போட்டி : டிரைலர்களில் முந்தும் 'ஜனநாயகன்' | எனக்கு யாரும் முழு சம்பளம் தந்ததில்லை: ரச்சிதா மகாலட்சுமி பேச்சு | 'திரெளபதி 2' பாடலில் சின்மயி பாடல் நீக்கம்: இயக்குனர் பேட்டி |

மார்க் ஆண்டனி, ரத்னம் படங்களுக்கு பிறகு, சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த 'மதகஜராஜா' படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் புரமோஷனில் கலந்து கொண்ட விஷால், மேடையில் மைக்கை பிடித்து பேசும்போதே அவரது கைகள் நடுங்கியது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. அந்த வீடியோ வெளியானதை அடுத்து அவரைப் பற்றி பல்வேறு விதமான செய்திகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் தான் நடித்துள்ள 'காதலிக்க நேரமில்லை' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி, விஷால் குறித்து கூறுகையில், விஷால் ஒரு தைரியமானவர். இப்போது ஏதோ ஒரு மோசமான கட்டத்தில் இருந்து வருகிறார். இதிலிருந்து கண்டிப்பாக அவர் மீண்டு வருவார். அதற்கு அவரது தைரியமே அவருக்கு துணை நிற்கும். அதோடு என் நண்பன் விஷாலின் நல்ல மனசுக்கும், அவரது பெற்றோரின் நல்ல மனசுக்கும் கண்டிப்பாக மீண்டும் அவர் சிங்கம் போல் மீண்டு வருவார் என்று தனது நம்பிக்கையை தெரிவித்தார் ஜெயம் ரவி.




