'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது | லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் | மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? |

தமிழ் சினிமாவின் பிரமாண்டமான இயக்குனர் என்று பேசப்படுபவர் ஷங்கர் 'ஜென்டில் மேன் முதல் இந்தியன் 2' வரை அவர் இயக்கிய 13 தமிழ்ப் படங்களில் கடைசியாக வந்த 'இந்தியன் 2' படம்தான் தோல்வியைத் தழுவியது. அவருக்கு கடுமையான விமர்சனங்களையும் பெற்றுத் தந்தது.
அவர் முதல் முறையாக தெலுங்கில் இயக்கியுள்ள 'கேம் சேஞ்ஜர்' படம் நாளை பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இயக்குனர் ஷங்கருக்கு இது முக்கியமான ஒரு படம். 'இந்தியன் 2' படத்தில் அவர் இழந்த பெயரை இந்த 'கேம் சேஞ்ஜர்' படம் பெற்றுத் தந்தாக வேண்டும். அப்போதுதான் அடுத்து அவர் இயக்க உள்ள படங்களுக்கான வரவேற்பும் அதிகமாக இருக்கும்.
ஷங்கருக்கு மட்டுமல்ல நாயகன் ராம் சரணுக்கும் இது முக்கியமான படம். 'ஆர்ஆர்ஆர்' படம் ராஜமவுலி இயக்கம், ஜுனியர் என்டிஆருடன் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என இருந்தது. அதற்குப் பின் தனி நாயகனாக ராம் சரண் பெறப் போகும் வெற்றியும் எதிர்பார்க்கப்படும். ஷங்கர், ராம் சரண் இருவருக்கும் அடுத்த கட்ட மாற்றத்திற்கு 'கேம் சேஞ்ஜர்' வெற்றி மிக முக்கியமானது.