பிரியதர்ஷனின் ‛ஹைவான்' ஹிந்தி படத்தில் சிறப்பு தோற்றத்தில் மோகன்லால் | ராமன் தேடிய சீதை, பாட்ஷா, குடும்பஸ்தன் - ஞாயிறு திரைப்படங்கள் | இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு |

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் சிலர் அவர்களது ஆரம்ப காலத்தில் சொந்தக் குரலில் டப்பிங் பேசியதில்லை. அவர்களுக்காக வேறு சில நடிகர்கள்தான் குரல் கொடுத்திருக்கிறார்கள். நடிகர் சுரேஷ், விக்ரம் உள்ளிட்டோர் அப்படி சில முன்னணி நடிகர்களுக்கு டப்பிங் பேசியிருக்கிறார்கள்.
இப்போதைய முன்னணி நடிகராக இருக்கும் அஜித்துக்கு தமிழ் சினிமாவில் பெரும் திருப்புமுனையைத் தந்த படம் 1995ல் வெளிவந்த 'ஆசை'. வசந்த் இயக்கத்தில் தேவா இசையமைப்பில் அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், வடிவேலு மற்றும் பலர் அந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். அப்படத்தில் அஜித்துக்கு பின்னணி குரல் கொடுத்தவர் நடிகர் சுரேஷ்.
அஜித் தமிழில் அறிமுகமான 'அமராவதி' படத்திலும், அடுத்து நடித்த 'பாசமலர்கள்' படத்திலும் அவருக்கு பின்னணி குரல் கொடுத்தவர் நடிகர் விக்ரம். அஜித்தின் அடுத்த படமான 'பவித்ரா' படத்தில் அவருக்கு சேகர் என்பவர் டப்பிங் பேசியிருந்தார். தற்போது 'புஷ்பா 2' உள்ளிட்ட படங்களில் அல்லு அர்ஜுனுக்கு டப்பிங் பேசியவர்தான் சேகர்.
இன்று அஜித்தின் குரலுக்கென்றே ஒரு தனி மவுசு உண்டு. ஆனால், ஆரம்ப காலங்களில் அவருக்கு டப்பிங் குரல்தான் பயன்படுத்தப்பட்டது.