வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தென்னிந்திய சினிமாவில் அது எந்த மொழியாகட்டும், 80, 90 கால கட்டங்களில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை ரியூனியன் என்கிற பெயரில் ஒரு நாள் ஒன்று கூடி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க கேரளாவிலும் அவ்வப்போது இது போன்ற ரீயூனியன் சில விஷயங்களுக்காக நடக்கிறது. அப்படி மலையாள சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை சுசித்ரா. தமிழில் சிநேகதியே, காசி, ஏர்போர்ட் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
தற்போது இவர் பல வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி குடும்பத்துடன் அமெரிக்காவில் வசிக்கிறார். சமீபத்தில் இவர் கேரளாவுக்கு வருகை தந்துள்ளார், இதை முன்னிட்டு இவரது நட்பு வட்டாரத்தில் உள்ள சீனியர் நடிகைகளான மேனகா, கார்த்திகா, வனிதா, சிப்பி, ஸ்ரீ லட்சுமி மற்றும் சோனா நாயர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை நடிகை கார்த்திகா (நாயகன் கமல் மகள்) மேற்கொண்டார்.
இந்த சந்திப்பு குறித்து நடிகை சுசித்ரா கூறும்போது, “இரண்டு வருடங்களுக்கு முன்பு லவ்ளீஸ் ஆப் திருவனந்தபுரம் என்கிற வாட்ஸ் அப் குரூப் துவங்கப்பட்டது. அதில் இவர்களுடன் நானும் ஆரம்பத்திலேயே இணைந்தேன். அமெரிக்காவில் இருந்ததால் இவர்கள் அடிக்கடி ஒன்று கூடும் ரீயூனியனில் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்த வருத்தம் இருந்தது. முன்பு கேரளா வரும் போதும் இவர்களில் ஒவ்வொருவரை அவ்வப்போது தனித்தனியாக பார்த்துவிட்டு செல்வேன். ஆனால் தற்போது கேரளா வர வேண்டிய வேலை இருந்தபோது அந்த தகவலை நான் தெரியப்படுத்தியதும் எனக்காக இவர்கள் அனைவரும் எனக்காக ஒன்றுகூடி உள்ளார்கள்.. மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறியுள்ள சுசித்ரா கேரளாவில் 15 நாட்கள் முகாமிட்டுள்ளாராம்.




