ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் | மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு | கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் |
தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா உள்ளிட்ட பல நடிகைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிகர்கள் தற்கொலை என்பது மிகவும் அபூர்வமானது. அதில் மிகவும் முக்கியமானது ஸ்ரீநாத்தின் தற்கொலை. மலையாள படங்களில் நடித்து வந்த ஸ்ரீநாத் 'ரயில் பயணங்கள்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். டி.ராஜேந்தர் இயக்கிய இந்த படத்தில் அவருடன் ஜோதி நாயகியாகவும், ராஜிவ் வில்லனாகவும் நடித்திருந்தனர்.
காதல் தோல்வியை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் ஸ்ரீநாத் காதலில் தோற்று சோகமான வாழ்க்கை வாழ்பவராக நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு சின்ன முள் பெரிய முள், கள் வடியும் பூக்கள், பூவிழி வாசலிலே படங்களில் மட்டுமே நடித்தார் ஆனால் மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததார்.
2010ம் ஆண்டு 'சிகார்' என்ற படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பிற்காக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது அங்கு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினைகள் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவரது மரணம் தமிழ், மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.