தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா உள்ளிட்ட பல நடிகைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிகர்கள் தற்கொலை என்பது மிகவும் அபூர்வமானது. அதில் மிகவும் முக்கியமானது ஸ்ரீநாத்தின் தற்கொலை. மலையாள படங்களில் நடித்து வந்த ஸ்ரீநாத் 'ரயில் பயணங்கள்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். டி.ராஜேந்தர் இயக்கிய இந்த படத்தில் அவருடன் ஜோதி நாயகியாகவும், ராஜிவ் வில்லனாகவும் நடித்திருந்தனர்.
காதல் தோல்வியை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் ஸ்ரீநாத் காதலில் தோற்று சோகமான வாழ்க்கை வாழ்பவராக நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு சின்ன முள் பெரிய முள், கள் வடியும் பூக்கள், பூவிழி வாசலிலே படங்களில் மட்டுமே நடித்தார் ஆனால் மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததார்.
2010ம் ஆண்டு 'சிகார்' என்ற படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பிற்காக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது அங்கு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினைகள் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவரது மரணம் தமிழ், மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.