ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா, படாபட் ஜெயலட்சுமி, ஷோபா உள்ளிட்ட பல நடிகைகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிகர்கள் தற்கொலை என்பது மிகவும் அபூர்வமானது. அதில் மிகவும் முக்கியமானது ஸ்ரீநாத்தின் தற்கொலை. மலையாள படங்களில் நடித்து வந்த ஸ்ரீநாத் 'ரயில் பயணங்கள்' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். டி.ராஜேந்தர் இயக்கிய இந்த படத்தில் அவருடன் ஜோதி நாயகியாகவும், ராஜிவ் வில்லனாகவும் நடித்திருந்தனர்.
காதல் தோல்வியை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் ஸ்ரீநாத் காதலில் தோற்று சோகமான வாழ்க்கை வாழ்பவராக நடித்திருந்தார். இந்தப் படத்திற்கு பிறகு சின்ன முள் பெரிய முள், கள் வடியும் பூக்கள், பூவிழி வாசலிலே படங்களில் மட்டுமே நடித்தார் ஆனால் மலையாளத்தில் 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததார்.
2010ம் ஆண்டு 'சிகார்' என்ற படத்தில் நடித்தார். இதன் படப்பிடிப்பிற்காக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தபோது அங்கு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்சினைகள் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அவரது மரணம் தமிழ், மலையாள சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.